<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>வாழ்க்கை &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/வாழ்க்கை/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "வாழ்க்கை"</description>
	<pubDate>Sun, 06 Jul 2008 14:12:49 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[யாரிடமும் சொல்லிவிடாதே!]]></title>
<link>http://tamilraja.wordpress.com/?p=214</link>
<pubDate>Fri, 04 Jul 2008 03:49:00 +0000</pubDate>
<dc:creator>தமிழ் ராஜா</dc:creator>
<guid>http://tamilraja.wordpress.com/?p=214</guid>
<description><![CDATA[
என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்ல]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://tamilraja.files.wordpress.com/2008/07/atcaaabjjm6jutd2lg7mgcp_5jolnrod3ifaa1j6681mvaqn8uxeiyc-xsyl92mlt2e-iz0ifnq5eibrbh-l8v-aqbldajtu9vamatykph9r5z7sicsjzp-1brno7a.jpg"><img class="alignnone size-medium wp-image-215" src="http://tamilraja.wordpress.com/files/2008/07/atcaaabjjm6jutd2lg7mgcp_5jolnrod3ifaa1j6681mvaqn8uxeiyc-xsyl92mlt2e-iz0ifnq5eibrbh-l8v-aqbldajtu9vamatykph9r5z7sicsjzp-1brno7a.jpg?w=160" alt="" width="160" height="230" /></a></p>
<p>என் வாழ்க்கை எப்படி போகும்<br />
உன் சொல்லால் பாதைகள் மாறும்<br />
கனவாய் நீ இல்லை உயிராய்<br />
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்<br />
பொய்யை மறைக்கின்றேன் நான்<br />
இருப்பதாக இந்த உடலில்<br />
உண்மையில் நீயே எனை<br />
ஆட்கொண்டாய் உன் பார்வையில்<br />
யாரையோ கூப்பிட்டு விட்டு<br />
என்னை அழைத்தேன் என்கிறார்கள்<br />
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை<br />
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்<br />
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்<br />
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது<br />
என்னுயிரே வேலை செய்ய வில்லை<br />
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே<br />
தெரியும்.................<br />
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அவலை எனக்கு ரொம்பப் பிடிக்கும்]]></title>
<link>http://niram.wordpress.com/?p=217</link>
<pubDate>Mon, 30 Jun 2008 09:51:45 +0000</pubDate>
<dc:creator>உதய தாரகை</dc:creator>
<guid>http://niram.wordpress.com/?p=217</guid>
<description><![CDATA[கடந்த பல நாட்களாக நிறத்தில் எந்தப் ப]]></description>
<content:encoded><![CDATA[<p>கடந்த பல நாட்களாக நிறத்தில் எந்தப் பதிவையும் புதிதாக பதிப்பிக்க முடியாமல் போனதையிட்டு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்மிடமிருந்து ஒருவர் ஒன்றை எதிர்பார்க்கும் நிலையில் அதனை வழங்காமல் அவர் காட்டும் அத்தனை ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கும் எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்காது என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் நிறத்தில் புதிய வர்ணங்கள் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக உங்களுக்கு ஏமாற்றத்தே தந்திருக்கும். அதனை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சல்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. சரி.. சரி.. மேட்டருக்கு வாரேன்...</p>
<p><!--more தொடர்ந்து படிக்க... --></p>
<p>நாம் ஏதாவதொன்றை தவறாகவோ அல்லது பொருத்தமில்லாதவாறோ செய்துவிட்டால் அதற்கு "என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" (நல்ல தமிழில் இல்லப்பா ஆங்கிலத்தில் சொல்வதானால் I am sorry என்று சொல்வார்கள்.. ) இருக்கட்டும்.. இருக்கட்டும்.. மலிந்துவிட்ட Sorryகள் என்ற தலைப்பில் ஒருபதிவை ஏற்கனவே நிறத்தில் பதிவிட்டிருந்தது நீங்கள் அறிந்ததே! ஆனால் நாம் செய்த தவறுக்காக அல்லது பொருத்தமி்ல்லாத நடவடிக்கைக்காக வெறும் Sorry கேட்டுவிடுதல் போதுமானதா? - எனக்குள் இன்று காலை எழுந்த கேள்வியிது.</p>
<p><img class="alignleft size-full wp-image-218" src="http://niram.wordpress.com/files/2008/07/calm.jpg" alt="" width="200" height="225" />நாம் பிழைகளைச் செய்துவிட்டு பின்னர் குறிப்பிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சமாளிக்கப்பட்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. மற்றவர்களிடம் ஏதாவது சொல்லி நாம் செய்த தவறுகளை சமாளிபிக்கேஷன் செய்துவிடலாம் என்ற நினைப்பு பொருத்தமற்றதென்றே சொல்லலாம். மன்னிப்பு என்று கேட்டுவிட்டால் மன்னிப்பு வழங்குபவர்களே மனிதர்களில் புனிதர்கள். மன்னிப்பது மகத்துவமானது. மனிதர்களுள் புனிதர்களாகி விளங்குபவர்களே மன்னிப்பதை மகத்துவமாகக் கொண்டிருப்பர்.</p>
<p>நீங்கள் மன்னிக்கக் கோரும் விண்ணப்பங்களை ஏற்காதவர்கள், உங்களை நற்குணத்திலிருந்து பிறழ்ந்தவர்களாகக் கணிக்கக்கூடும். அதற்கான காரணங்களையும் சந்தர்ப்பங்களையும் உங்கள் முன்னால் நிறுத்தக்கூடும். இதேவேளை, நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, It's ok என்று உங்களை தேற்றி மன்னிப்பு வழங்குபவர்கள், நீங்கள் செய்த விடயத்தால் உண்டான விளைவுகளின் அதிர்ச்சியை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அல்லது சந்தித்திருக்கலாம். ஆனாலும், வெறும் Sorry என்ற வார்த்தைகளால் மட்டும் மன்னிப்பின் மகத்துவத்தை வரையறுக்காமல், நாம் செய்யும் செயல்களால் மற்றவர்கள் அடையக்கூடிய அசெளகரியங்களைப் பற்றியும் சிந்தித்தல் சாலப் பொருத்தமானது. இது மன்னிப்புக் கேட்கும் எமது தொனியில் அன்பையும் ஆழத்தையும் கொண்டு தரும்.</p>
<p>தவறாகப் புரிந்து கொண்ட நிலைகளைத் தெளிவாகப் பின்னர் புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளச் செய்வதும் இலகுவான காரியங்கள் தான். ஆனால், சுய கெளரவம் மற்றும் அகம்பாவம் என்பவற்றின் விளைவால் குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தவறுக்கு நான் எப்படியும் காரணமாக இருக்கமாட்டேன் என்று ஆணித்தரமாக வாதிடுவதோ அல்லது கூறி நிற்பதோ மற்றவர்களின் எரிச்சலையையே அதிகளவில் சம்பாதித்துத் தரும்.</p>
<p>இதனை இப்படி எளிய முறையில் சொல்லிவிடலாம். அதாவது, "நீங்கள் என்னைப் புரிந்து கொள்வதல்ல. மாறாக, உங்களை நான் நான் புரிந்து கொள்வதுதான்" என்று சொல்லிவிடலாம். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் என்பதோடு, இனிய பொழுதுகளை எமக்குச் சொந்தமாக்கிச் செல்லும். வாழ்க்கையில் நாம் புரிதலின் ஆதாரங்களாகவே இருக்கின்றோம்.</p>
<p>ஆமா,. தலைப்பில் ஏதும் எழுத்துப் பிழைகள் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டே இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நான் எண்ணுகிறேன். ஆனால் தலைப்பில் எந்த எழுத்துப் பிழையும் இல்லை. நேற்று எனது நண்பனின் வீட்டிலிருந்து அவலை அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவல் என்றால் ரொம்பப் பிடிக்கும். இரசித்து ருசித்துச் சாப்பிடுவேன் அவலை. ஆமா அதுதாங்க.. அரிசியை குத்தி எடுத்தால் வரும் தகட்டு அரிசி.. அதுதான் அவல்.. உங்களுக்குத் தெரியாதா என்ன?? அவலில் சீனிப்பாகு இட்டு செய்து அனுப்பியிருந்தார்கள். அவலிடம் கொண்ட பிரியத்தால் சீக்கிரமாகவே நண்பனுக்கு அனுப்பப்பட்ட அவலை பதம் பார்த்து விட்டேன். கடைசியில் Sorry என்று சொல்லிவிடலாம் என்ற நிலை தோன்றியது. நண்பனாச்சே.. நான் அவலுக்கு ரொம்பப் பிரியம் என்பதை அவனறிவான். புரிந்து கொள்வதென்பதில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றாது என்பதற்கு அவல் தொடர்பான நிகழ்ச்சியும் ஒரு ஆதாரம் தான்.</p>
<p>என்னது.. நீங்க இப்படி இருப்பீங்க என்று நாங்க நெனக்கவேயில்ல என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்குப் புரியாமல் இல்லை. மேலே நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட அவல் பற்றிய சந்தர்ப்பம் எனது நண்பன் ஒருவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதுதான். இங்கு பொருத்தமாகவிருக்கும் என எண்ணினேன் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். உங்கள் எண்ணங்களையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.</p>
<p>- உதய தாரகை</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கேள்வியின் நாயகர்]]></title>
<link>http://kathambamaalai.wordpress.com/?p=499</link>
<pubDate>Mon, 30 Jun 2008 04:01:42 +0000</pubDate>
<dc:creator>The Visitor</dc:creator>
<guid>http://kathambamaalai.wordpress.com/?p=499</guid>
<description><![CDATA[ இவர் கேள்வியா கேட்டுகினு இருக்கார்:
W]]></description>
<content:encoded><![CDATA[<p> இவர் கேள்வியா கேட்டுகினு இருக்கார்:</p>
<blockquote><p><a href="http://cyberdiaries.blogspot.com/" target="_blank">What do you rate higher: senses or intellect? Or are they incomparable and both indispensable?<br />
...<br />
What is forgiving according to you? Is it possible for you to forgive?<br />
...<br />
..."What's the point of this life that is going to end one day?",...</a>
</p></blockquote>
<p>இப்படிப் பலப் பல...</p>
<p>- உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஓரடியார்]]></title>
<link>http://kathambamaalai.wordpress.com/?p=498</link>
<pubDate>Sat, 28 Jun 2008 07:52:56 +0000</pubDate>
<dc:creator>The Visitor</dc:creator>
<guid>http://kathambamaalai.wordpress.com/?p=498</guid>
<description><![CDATA[இவர் ஓரடிகளில் உலகை அளக்கப் பார்க்கி]]></description>
<content:encoded><![CDATA[<p>இவர் ஓரடிகளில் உலகை அளக்கப் பார்க்கிறார்:</p>
<blockquote><p><a href="http://subbun.wordpress.com/category/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/" target="_blank">ஒத்தடம் - ஊடலுக்குப் பின்கொடுக்கப்படும் முத்தம்</a></p></blockquote>
<blockquote><p><a href="http://subbun.wordpress.com/category/1-liner/" target="_blank">Tough person-Is one whose inner motives are only gusseable..</a></p></blockquote>
<blockquote><p><a href="http://subbun.wordpress.com/category/1-liner/page/2/" target="_blank">Difference of Opinion-A non-empty set given a set of even 2 members</a></p></blockquote>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பொய் புளுகு புறணி டுமீல்!]]></title>
<link>http://manoranjitam.wordpress.com/?p=383</link>
<pubDate>Thu, 26 Jun 2008 03:17:29 +0000</pubDate>
<dc:creator>Srikanth</dc:creator>
<guid>http://manoranjitam.wordpress.com/?p=383</guid>
<description><![CDATA[குழந்தைகள் எப்போது பொய் சொல்ல ஆரம்பி]]></description>
<content:encoded><![CDATA[<p>குழந்தைகள் எப்போது பொய் சொல்ல ஆரம்பிக்கின்றன தெரியுமா? அவர்கள் கூட இருக்கும் பெரியவர்கள் - ரொம்ப "பெரீயவர்கள்" இல்லை, அதாவது பெரியவர்களாக இருப்பதால் எல்லாமே அவர்களுக்கு தெரிந்து விடாது - பெரியவர்களுக்கும் ஒரு limit இருக்கிறது என்று குழந்தைகள் தெரிந்து கொள்ளும்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். </p>
<p>ஒரு பாலர் பள்ளியில் மூன்று அல்லது நான்கு வயதுடைய குழந்தைகளை வைத்து, பொய் சொல்லும் திறனை அறிய ஆராய்ச்சி செய்தார்கள். ஒவ்வொரு குழந்தையாக அழைத்துப் போய், ஒரு அறையில் உட்கார வைத்து "உன் முதுகுப்புறம் உள்ள மேஜையில்  ஒரு விளையாட்டுப் பொருளை வைத்திருக்கிறேன். திரும்பி பார்த்தாயோ தெரியும் சேதி!" என்று மிரட்டி விட்டு, அந்த குழந்தையை தனியாக விட்டு சென்று  விட்டார்கள்.  </p>
<p>சிறிது நேரம் கழித்து அந்த குழந்தையை அழைத்து வெளியே வந்து, திரும்பி பார்த்தாயா என்று கேட்கப்பட்டது. இப்படி எல்லா குழந்தைகளையும் விசாரித்தார்கள். ஒரு பத்து சதவீதம் குழந்தைகள் திரும்பி பார்க்கவே இல்லை. மீதத்தில் முப்பது சதவீதம் குழந்தைகள், திரும்பி பார்த்தாலும் பார்க்கவே இல்லை என்று பொய் சொன்னார்கள். இன்னொரு முப்பது சதவீதம் திரும்பி பார்த்தேன் என்று ஒப்புக்கொண்டார்கள். மீதம் இருக்கிற முப்பது சதவீதம் பதில் சொல்லாமல் இருந்தார்கள். பொய் சொன்னவர்களும், உண்மை சொன்னவர்களும் தைரியமாகவே இருந்தார்கள். இந்த பதில் சொல்லாத குழந்தைகள் ரொம்ப பயந்து போய் இருந்தன - அவர்கள் பொய் சொல்ல இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை. </p>
<p>இப்படி ஒரு பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக, அல்லது ஆசைப்பட்ட பொருளை அடைவதற்காக என்று பொய் சொல்வதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொய்யில் பெரிய வேறுபாடு இல்லை - பொய்யின் விளைவில்தான் இருக்கிறது :)</p>
<p>பொய் என்றாலே நினைவுக்கு வருவது <a href="http://en.wikipedia.org/wiki/Joseph_Goebbels" target="_blank">ஜோசப் கொயப்பல்ஸ்</a>! இரண்டாம் உலகப்போரில் ஒரு பக்கம் ஹிட்லரையும், மறுபக்கத்தில் உலகத்தையும் ஏமாற்றிய செய்தித்துறை மந்திரி. அவராவது பழைய ஆள்! சமீபத்தில் ஒருவர் இருக்கிறார். அவருக்கு <a href="http://www.welovetheiraqiinformationminister.com/#quotes" target="_blank">வலையில் ரசிகர் மன்றமே</a> வைத்திருக்கிறார்கள். </p>
<p><img class="size-medium wp-image-384 alignleft" src="http://manoranjitam.wordpress.com/files/2008/06/politician.jpg?w=197" alt="" width="197" height="300" /></p>
<p>வளர்ந்த மனிதர்கள் சொல்லும் பொய்யிலும், பொய் சொல்பவர்களிலும் சில வகைகளை பார்ப்போம். சிலர் ஒரு வகை சமூக விரோத போக்கை கொண்டிருப்பார்கள். அவர்கள் கிரிமினல்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. தனது சுயநலமே பெரிது என்று நினைத்து, மற்றவர் அதனால் படும் கஷ்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இவர்கள் எதற்கும் அஞ்சாமல் சுய லாபத்திற்காக பொய் சொல்வார்கள். இவர்கள் வியாபாரிகளாகவோ, அரசியலிலோ இருக்கக் கூடும். பொய்யின் விளைவுகளுக்கு வருத்தப் படாமல், குற்ற உணர்வில்லாமல் இருப்பதால் இவர்கள் வாழ்க்கையில் வெற்றியும் பெறக்கூடும். </p>
<p>வேறு சிலர் அன்பிற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பொய் சொல்வார்கள். இவர்கள் தாங்களாகவே ஒரு கற்பனை உண்மையை நீட்டி முழக்கி சொல்வதில் பொய் கலந்து சொல்வார்கள். இவர்கள் கவிஞர்களாகவும் இருக்கக் கூடும் :)</p>
<p> </p>
<p>இன்னொரு வகை இருக்கிறார்கள். சுய காதல் அதிகம் உடையவர்கள். இவர்களுக்கு எப்போதும் எல்லா விஷயத்திலும் வெற்றி பெற்றவர்களாக இருக்க வேண்டும், மற்றவர்களிடம் இவர்கள், தான் மிகவும் சிறந்தவர் என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய மனிதர்கள் எப்போதும் அடுத்த மனிதர்களிடமிருந்து சிறப்பு கவனிப்பை எதிர்பார்ப்பார்கள். இதற்காக சளைக்காமல், தான் செய்தது, செய்யாதது எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு அதிகப்படியாக அடித்து விடுவார்கள். கேட்பவர்கள், இவர்களின் சுயபுராணத்தை எல்லாம் தன்னம்பிக்கை என்றும், இருந்தாலும் இருக்கும் என்று நினைத்து நம்பிவிடுவார்கள். </p>
<p>சிலர் உணர்ச்சி வசப்படுவார்கள் - அதனால் தவறுக்கு மேல் தவறு நிகழும். இதை மறைப்பதற்காக பொய் சொல்வார்கள். இவர்கள் சொல்லும் பொய்கள் எல்லாம் பழியை அடுத்தவர் மேல் போடுவதற்காகவும், பொறுப்பை தட்டிக் கழிப்பதற்காகவும் இருக்கும்.</p>
<p>கடைசியில் ஒரு வகை, இவர்கள் ரொம்பவும் நேர்மையாகவும், திறமையாகவும் நிஜமாகவே இருக்க வேண்டும் என்று ஒரு கொள்கை வைத்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அந்த அளவுக்கு இவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக்கொண்ட அளவுக்கு திறமையாளர்களாக இருக்க இயலாமல் போக அதை மறைக்க பொய் சொல்வார்கள். சமயத்தில் சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்வார்கள். கடையில் அதிக விலைக்கு பொருளை வாங்கி விட்டு, வீட்டில் மனைவியிடம் மிகவும் குறைவாக பேசி வாங்கியதாக சொல்வதைப் போலத்தான். </p>
<p>பொய் சொல்லாமலே ஒரு  மனிதன் இருக்க முடியுமா என்று யோசிக்கவே முடியவில்லை. நாம் எவ்வளவு பொய் சொன்னாலும் நமது குழந்தைகளையாவது பொய் சொல்லாதே என்று சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களாவது, நேர்மையான,  ஒருமைப்பாடு உடையவர்களாக, வெற்றி பெறுபவர்களாக, சமூகத்தில் நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களாக இருப்பார்கள். </p>
<p>இது எப்படி என்றால், பள்ளியில் ஆசிரியரிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? மாணவர்களை நன்றாகப் படிக்க வைப்பார் என்றுதானே? அவர் "நானே படிக்கிற காலத்தில் சரியாகப் படித்ததில்லை - இந்த குழந்தைகளை எப்படி கஷ்டப்படுத்துவேன்" என்று சொன்னால் எப்படி இருக்கும்! அது போல, நாம் பொய் சொன்னாலும் நமது குழந்தைகளை பொய் சொல்ல விடக் கூடாது!</p>
<p>[பொய் பற்றிய ஆராய்ச்சிக்கு பழைய <a href="http://www.nytimes.com">NYTimes</a>ன் கட்டுரையை நான் படித்துவிட்டு எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். :) ]</p>
<p> </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அவள் அருகிலில்லாத இரவுகள்!!!]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=247</link>
<pubDate>Thu, 26 Jun 2008 00:43:03 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=247</guid>
<description><![CDATA[
அவள்
அருகிலில்லாத இரவுகள்
எப்படி உற]]></description>
<content:encoded><![CDATA[<p style="text-align:left;"><img class="alignnone" src="http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/700212-3-forever-b-w.jpg" alt="" width="385" height="270" /></p>
<p style="text-align:left;">அவள்<br />
அருகிலில்லாத இரவுகள்<br />
எப்படி உறங்குவாய்?</p>
<p>மின்சாரம் தடைப்பட்ட<br />
இரவுகளும்  அதுபோலவே;</p>
<p style="text-align:left;">உடைந்து வரும் வார்த்தைகளில்<br />
மத்திய மாநில சர்க்கார்கள்<br />
நொறுங்கிபோயிருக்கும்;</p>
<p style="text-align:left;">புரண்டு படுத்தாலும்,<br />
முகம் புதைத்தாலும்,<br />
போர்வை உதறினாலும்<br />
வருவதில்லை நேற்று வந்த தூக்கம்!</p>
<p>தியானத்திற்கு  எழுத்து கூட்டாத நீ<br />
கண்ணை மூடி உறக்கத்தை<br />
உச்சரிக்க வேண்டிவரும்,<br />
அவள் அருகிலில்லாத இரவுகளில்,<br />
மின்சாரம் தடைப்பட்ட இரவுகளில்!</p>
<p>மகாநதிகளும்,காற்றும்,கடலும்<br />
என் கருவறைகள்,<br />
இனிவரும் நூற்றாண்டுகளில்<br />
குளோனிங் குழந்தைகள்<br />
கருவறை தொடாமல் கால் பதிக்கலாம்;<br />
மின்சாரம் இல்லாமல்?</p>
<p>காதலின் சாட்சியாக<br />
இருந்த குழந்தைகள்,<br />
விஞ்ஞானத்தின் நீட்சியாகும்போது,<br />
அவள் அருகிலில்லாத இரவுகள்?<br />
மின்சாரம் தடைப்பட்ட இரவுகள்!</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[வாழ்வின் நோக்கம்]]></title>
<link>http://nanavuhal.wordpress.com/2008/06/20/vaazkkai-nookkam/</link>
<pubDate>Fri, 20 Jun 2008 10:05:32 +0000</pubDate>
<dc:creator>அ.நம்பி</dc:creator>
<guid>http://nanavuhal.wordpress.com/2008/06/20/vaazkkai-nookkam/</guid>
<description><![CDATA[ 
&nbsp;
வாழ்வின் நோக்கம்
(திருமுறை விளக்க]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://nanavuhal.files.wordpress.com/2008/06/sn.jpg"><img style="border-width:0;" height="291" alt="sn" src="http://nanavuhal.files.wordpress.com/2008/06/sn-thumb.jpg" width="375" border="0"></a> </p>
<p><font face="SooriyanDotCom" size="5"></font>&#160;</p>
<p><font face="SooriyanDotCom" size="5">வாழ்வின் நோக்கம்</font></p>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">(திருமுறை விளக்கம்: 02)</font>
<p><b><font face="SooriyanDotCom" size="2"></font></b>
<p><font face="SooriyanDotCom" size="2">நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறான் ஒருவன்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">விரைவாக ஓடுகிறான்; மிக விரைவாக ஓடுகிறான்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">அவனோடு ஓடத் தொடங்கியவர்கள் எல்லாரும் ஓடி முடிக்கிறார்கள்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">அவன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறான்; நில்லாது ஓடிக்கொண்டே இருக்கிறான்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">எப்போது ஓடி முடிப்பான்?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஓடி முடிப்பானா என்பதே ஐயம்தான்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஏன்?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`ஏன் ஓடுகிறோம்’ என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறான்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`எதை நோக்கி ஓடுகிறோம்’ என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறான்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`எப்படி ஓடவேண்டும்’ என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறான்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`ஓடவேண்டும்’ என்பதற்காகவே ஓடிக்கொண்டிருக்கிறான்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`ஓடி முடிக்கவேண்டும்’ எனும் நோக்கம் இல்லாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறான்.</font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்</b><b></b></font></font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>&#160;&#160;&#160;&#160;&#160; தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்</b><b></b></font></font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்</b><b></b></font></font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>&#160;&#160;&#160;&#160; உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்</b><b></b></font></font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்</b><b></b></font></font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>&#160;&#160;&#160;&#160; அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்</b><b></b></font></font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்</b><b></b></font></font>
<p><font size="2"><font face="SooriyanDotCom"><b>&#160;&#160;&#160;&#160; பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே. (6.95.6)</b><b></b></font></font><br />
<blockquote>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">&#160;&#160;&#160; தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">&#160;&#160;&#160; உண்பதன் முன் மலர்பறித்திட்டு உண்ணார் ஆகில்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">அருநோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">&#160;&#160;&#160; அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">&#160;&#160;&#160; பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">`இறைவரின் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைச் சொல்லமாட்டார்கள் ஆயின், தீப்போலும் திருமேனியுடைய எம்பெருமானின் மேன்மைகளை ஒருமுறையேனும் பேசமாட்டார்கள் ஆயின், திருக்கோயிலை ஒருமுறையேனும் வலம்வரமாட்டார்கள் ஆயின், உண்பதற்கு முன் மலர்களைப் பறித்துத் தூவி இறைவரை வணங்கிப் பின் உண்ணமாட்டார்கள் ஆயின், தீரா நோய்களைத் தீர்க்கும் திருநீற்றை அணியமாட்டார்கள் ஆயின் இவர்கள் அன்பு இல்லாதவர்களே ஆவர். இவர்கள் பெரிய நோய்கள் மிகவும் வருத்த, மீண்டும் மீண்டும் இறந்து, பிறப்பதே தொழிலாகி இறக்கிறார்கள். அன்பு இல்லா இவர்கள் பிறந்தது இதற்காகவே.’</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">அஞ்செழுத்து – திருவைந்தெழுத்து; நமசிவய; சிவயநம; இறைவர் திருப்பெயர்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">ஆகில் – ஆனால்; ஆயின்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">செப்பார் – சொல்லமாட்டார்கள்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">தீவண்ணர் – செம்மேனி எம்மான்; சிவபெருமான்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">திறம் – மேன்மை; பெருமை</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">சூழார் – வலம்வரமாட்டார்கள்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">அருநோய்கள் – அரிய நோய்கள்; கொடிய நோய்கள்; பிறவிப்பிணி</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">கெட – தீர</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">அளி – அன்பு</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">அளி அற்றார் – அன்பு இல்லாதவர்கள்</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">நலிய – வருத்த</font>
<p><font face="SooriyanDotCom" color="#008000" size="2">பெயர்த்தும் – மீண்டும்</font></p>
</blockquote>
<p><font face="SooriyanDotCom" size="2">மனிதர் உயர்ந்த வாழ்க்கை வாழவேண்டும்; சிறந்த வாழ்க்கை வாழவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கு முயற்சியும் உழைப்பும் வேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">எந்த முயற்சி ஆயினும், எத்தகைய உழைப்பு ஆயினும் அது தெளிவான நோக்கத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">கட்டாயம் படிக்கவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">என்ன நோக்கத்திற்காகப் படிக்கிறோம் என்று தெரிந்து படிக்கவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">படிக்கவேண்டும் என்பதற்காகவே படிக்கலாமோ?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இத்தகைய படிப்பு நோக்கமில்லாத படிப்பு ஆகிவிடும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">கட்டாயம் வேலை செய்யவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">என்ன நோக்கத்திற்காக வேலை செய்கிறோம் என்று தெரிந்து வேலை செய்யவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வேலை செய்யவேண்டும் என்பதற்காகவே வேலை செய்யலாமோ?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இத்தகைய வேலை நோக்கமில்லாத வேலை ஆகிவிடும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">கட்டாயம் செல்வம் சேர்க்கவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">என்ன நோக்கத்திற்காகச் செல்வம் சேர்க்கிறோம் என்று தெரிந்து செல்வம் சேர்க்கவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">செல்வம் சேர்க்கவேண்டும் என்பதற்காகவே செல்வம் சேர்க்கலாமோ?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இத்தகைய செல்வம் நோக்கமில்லாத செல்வம் ஆகிவிடும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">கட்டாயம் வாழவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">என்ன நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்று தெரிந்து வாழவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வாழவேண்டும் என்பதற்காகவே வாழலாமோ?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இத்தகைய வாழ்க்கை நோக்கமில்லாத வாழ்க்கை ஆகிவிடும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">பல நோக்கங்கள் இருக்கலாம்; தவறு இல்லை.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஆனால் இறுதி நோக்கம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">எல்லா நோக்கங்களும் இறுதி நோக்கத்தையே நோக்கிச் செல்லவெண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இறுதி நோக்கம் என்ன?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">நம் சமயம் தெளிவாக விடை சொல்கிறது.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வையத்தில் வாழ்வாங்கு வாழவேண்டும்; நல்லவண்ணம் வாழவேண்டும்; மீண்டும் பிறவி எடுக்காதபடி வாழவேண்டும்; பிறவிப்பிணியை ஒழிக்கும்வண்ணம் வாழவேண்டும்; இவ்வாறு வாழ்ந்து இறைவர் திருவடிப்பேற்றை அடையவேண்டும்; வீடுபேறு அடையவேண்டும்; இதுவே இறுதி நோக்கம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்</font>
<p><font face="SooriyanDotCom" size="2">எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை’</font>
<p><font face="SooriyanDotCom" size="2">என்பார் தமிழ்ஞானசம்பந்தர்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">செம்மையான வாழ்க்கைதான் வீடுபேறு அடைவதற்கு உரிய வழி.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">எண்ணம், பேச்சு, செயல் யாவும் செம்மையாக இருக்கவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">எண்ணத்தையும், பேச்சையும், செயலையும் எப்போதும் செம்மையாக வைத்திருப்பது எப்படி?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`இறைவரை வழிபடுங்கள்’ என்று அருளிச்செய்கிறார் `திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்’ எனத் திருவாரூரால் ஏத்தப்பெறும் திருநாவுக்கரசர் பெருமானார்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இதுதான் வழி; இது மட்டுமே வழி; இதனைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒரே வழியாகிய இந்த வழியில் நாம் முனைப்பாகச் செல்கிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">முறையாக இறைவழிபாடு செய்கிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">தவறாமல் இறைவழிபாடு செய்கிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">மந்திரங்களுள் மிக உயர்ந்த மந்திரம் இறைவரின் திருப்பெயர்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`நமசிவய’ என்பதும் `சிவயநம’ என்பதும் இறைவரின் திருப்பெயர் மந்திரம்; திருவைந்தெழுத்து மந்திரம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒவ்வொரு நாளும் பலமுறை நீர் அருந்துகிறோம்; உணவு உட்கொள்ளுகிறோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் வாயால் இறைவரின் திருப்பெயரைச் சொல்ல முடியாதா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">சொல்ல முடியும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">சொல்கிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒவ்வொரு நாளும் என்ன என்னவோ பேசுகிறோம்; அரசியல்கதை பேசுகிறோம்; அடாவடிக்கதை பேசுகிறோம்; வீண்கதை பேசுகிறோம்; வெட்டிக்கதை பேசுகிறோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் இறைவரின் மேன்மைகளைப் பேச முடியாதா? இறைவரின் மேன்மைகளைச் சொல்லும் அருள்நூல்கள் குறித்துப் பேச முடியாதா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">பேச முடியும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">பேசுகிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒவ்வொரு நாளும் எங்கு எங்கோ செல்கிறோம்; என்ன என்னவோ செய்கிறோம்; அலுவலகத்திற்குச் செல்கிறோம்; அங்காடிக்கடைகளுக்குச் செல்கிறோம்; விளையாடும் இடத்திற்குச் செல்கிறோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் திருக்கோயிலுக்குச் சென்று வலம்வர முடியாதா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வலம்வர முடியும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வலம்வருகிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒவ்வொரு நாளும் உண்பதற்கு முன்னும் உண்ட பின்னும் என்ன என்னவோ செய்கிறோம்; வேலை செய்கிறோம்; ஓய்வு பெறுகிறோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">உண்பதற்கு முன்னர் ஒருமுறையேனும் மலர்கள் தூவி இறைவரை வழிபட்டுப் பின் உண்ண முடியாதா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வழிபட்டு உண்ண முடியும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வழிபட்டு உண்கிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">ஒவ்வொரு நாளும் முகத்துக்கும் உடலுக்கும் ஏதேதோ செய்துகொள்கிறோம்; குளிக்கிறோம்; உடுத்திக்கொள்கிறோம்; அணிகலன்களை அணிந்துகொள்கிறோம்; முகத்துக்கு மணப்பொடி பூசிக்கொள்கிறோம்; முடிக்கு எண்ணெய் இட்டுக்கொள்கிறோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">பெருநோய்களையும் பிறவிநோயையும் தீர்க்கவல்ல திருநீற்றை ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் நெற்றியில் அணிந்துகொள்ள முடியாதா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">அணிந்துகொள்ள முடியும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">அணிந்துகொள்கிறோமா?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இந்த ஐந்தும் நம் அன்றாடக் கடமைகள். </font>
<p><font face="SooriyanDotCom" size="2">இவற்றை நாம் செய்யவில்லை என்றால் இறைவரிடம் நாம் அன்பு இல்லாதவர்கள்தாம்; ஐயம் இல்லை; அப்பர் பெருமானார்தம் திருமொழிக்கு அட்டி இல்லை.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">அன்பு இல்லா நாம் எதற்காகப் பிறந்தோம்?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">`பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே’ என நமக்காக இரங்கி அருளிச்செய்கிறார் பெருமானார்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">மீண்டும் இறப்பது, மீண்டும் பிறப்பது, மீண்டும் இறப்பது, மீண்டும் பிறப்பது, மீண்டும் இறப்பது, மீண்டும் பிறப்பது, மீண்டும் இறப்பது...</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இறப்பதுவும் பிறப்பதுவுமே தொழிலாகி விடுகிறது நமக்கு.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இறப்பதற்காகவே பிறக்கிறோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">பிறப்பதற்காகவே இறக்கிறோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இதுவா வாழ்க்கை?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இஃது என்ன வாழ்க்கை?</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இதுதான் நோக்கம் இல்லாத வாழ்க்கை.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">நோக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அன்று.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">நோக்கமுள்ள வாழ்க்கை வாழவேண்டும்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இது சமுதாயப் பேரொளி திருநாவுக்கரசர்தம் ஆணை.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">அரசர் பெருமானார் ஆணைவழி நடப்போம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">வழிபடுவோம்; வாழ்வோம்.</font>
<p><font face="SooriyanDotCom" size="2">இறைவர் அருள்வார்.</font>
<p><strong><font face="SooriyanDotCom" size="3">- அ. நம்பி</font></strong>
<p><font face="SooriyanDotCom" size="3"></font></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நீதான் உலகம்...]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=243</link>
<pubDate>Thu, 19 Jun 2008 01:49:08 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=243</guid>
<description><![CDATA[
உன்னைப் படை,
உன்னையே அழி,
உன்னை வெட்ட]]></description>
<content:encoded><![CDATA[<p><img style="vertical-align:text-top;" src="http://farm3.static.flickr.com/2041/2534030357_d488203107.jpg?v=0" alt="" width="407" height="305" /></p>
<p>உன்னைப் படை,<br />
உன்னையே அழி,<br />
உன்னை வெட்டி திருத்து;<br />
ஒரு மழழையின்<br />
ஓவியம்<br />
வாங்கிப்பார் தெரியும்,<br />
உடைத்து எறியப்பட்ட<br />
நட்சத்திர துண்டுகளும்,<br />
கிழிந்துபோன சூரியனும்!</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சுதா மூர்த்தி]]></title>
<link>http://kathambamaalai.wordpress.com/?p=492</link>
<pubDate>Sat, 14 Jun 2008 04:23:04 +0000</pubDate>
<dc:creator>The Visitor</dc:creator>
<guid>http://kathambamaalai.wordpress.com/?p=492</guid>
<description><![CDATA[Today I was searching for Sudha Murthy to locate her contact details, when I came across this blog p]]></description>
<content:encoded><![CDATA[<p>Today I was searching for Sudha Murthy to locate her contact details, when I came across this blog post that kind of touched me.  Probably many people have heard the story before, but here it is again:<br />
<a href="http://worldofdilip.wordpress.com/2008/05/23/infosys-narayana-murthys-wife-sudha-murthys-experience/" target="_blank">Infosys Narayana Murthy’s wife Sudha Murthy’s Experience</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நேருக்கு நேர்!!!]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=231</link>
<pubDate>Wed, 11 Jun 2008 17:56:52 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=231</guid>
<description><![CDATA[
காற்றை
சந்திக்க புறப்பட்டேன்,
காதல் ]]></description>
<content:encoded><![CDATA[<p><img style="vertical-align:text-top;" src="http://farm1.static.flickr.com/82/206977898_4d753b0b30.jpg?v=1205789444" alt="" width="316" height="423" /></p>
<p>காற்றை<br />
சந்திக்க புறப்பட்டேன்,</p>
<p>காதல் போலத்தான்<br />
காற்றும்,<br />
உன்னைச் சுற்றியிருக்கும்<br />
உனக்குள்ளும் இருக்கும்!</p>
<p>தேடியலைய<br />
தேவையில்லை,<br />
உணர்வதுதான்<br />
உன் வேலை!</p>
<p>சாலையில் வந்தது<br />
எதிர் காற்று,<br />
பின் கீழ்க்காற்று,<br />
வடக்கிலிருந்து வீசிய<br />
வாடைக்காற்று,</p>
<p>இளமையில்<br />
மிதி வண்டியை,<br />
நடைவண்டியாகிய<br />
மேல்காற்று,</p>
<p>மார்கழியில்<br />
போர்வைக்குள் புகுந்த<br />
பனிக்காற்று,</p>
<p>புதுமணப் பூக்களை<br />
வாட வைக்கும்<br />
ஆடிக்காற்று,</p>
<p>சித்திரையில்<br />
கத்திரிக்கு பிறந்த<br />
அனல் காற்று,</p>
<p>ஜுனில்<br />
பள்ளிக்கு வந்த<br />
பூவிற்கு,<br />
செப்டம்பரில்<br />
கடிதம் கொடுக்கும்<br />
பருவக்காற்று,</p>
<p>கோபியரை<br />
கொள்ளை கொண்டது<br />
வேய்ங்குழலில் பூத்த<br />
கண்ணனின்<br />
காதல் காற்று,</p>
<p>அதிசயம்தான்,<br />
பங்குச் சந்தை<br />
தெரியாத<br />
வியாபாரக் காற்று,</p>
<p>பக்கம் நின்றாலே<br />
பதங்கமாவாய்,<br />
அவளின் மூச்சுக் காற்று,</p>
<p>ஐந்து நாள்<br />
அவசர வாழ்க்கையை,<br />
அரைமணி  நேர<br />
நிதானத்தில்<br />
கரைக்கும்<br />
கடற்கரை காற்று,</p>
<p>நிலாமுற்றத்தில்<br />
அன்னை மடியே<br />
சுகம்,<br />
வரும் தென்றல்<br />
ஒரு உயிரின்<br />
இரு பிரதிகளையும்<br />
வருடிவிட்டுப்போகும்,<br />
அது தெய்வீக காற்று,</p>
<p>காற்றின்<br />
பரிமாணங்களை<br />
புரியமுடியாது,<br />
தென்றலாய் கொஞ்சும்,<br />
சூறாவளியாய் சுழற்றும்,<br />
புயலாய் சீறும்,</p>
<p>காதலும் அதுபோலவே,</p>
<p>நீ<br />
மகிழ்வாய்,<br />
துயில்வாய்,<br />
துணுக்குருவாய்,<br />
துயரடைவாய்,</p>
<p>காதலும்,காற்றும்<br />
ஒருபோதும்<br />
ஓய்வதில்லை,<br />
ஓய்ந்தால்<br />
அப்போது<br />
உலகமில்லை!</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[என்ன தேடுகிறாய்???]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=228</link>
<pubDate>Sun, 08 Jun 2008 18:10:12 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=228</guid>
<description><![CDATA[
என்ன தேடுகிறாய்
கால் சட்டையுடன்
காண]]></description>
<content:encoded><![CDATA[<p><img style="vertical-align:text-top;" src="http://farm3.static.flickr.com/2380/2238876541_22fdf895f1.jpg?v=0" alt="" width="265" height="399" /></p>
<p>என்ன தேடுகிறாய்<br />
கால் சட்டையுடன்<br />
காணாமல் போன<br />
குதூகலத்தையா?</p>
<p>தம்பிக்கு தெரியாமல்<br />
தின்ன கடலை மிட்டாயின்<br />
இனிப்பையா?</p>
<p>விடை எழுதாமல்<br />
கேள்வித்தாளிலே<br />
வியர்த்துவிட்ட<br />
உன் கல்விஞானத்தையா?</p>
<p>பால்யத்தில் என்றாவது<br />
படுத்தபிறகும் உறக்கமின்றி<br />
புரண்டிருக்கிறாயா?</p>
<p>எழுந்தபிறகு சிற்றுண்டி<br />
முடித்து உறக்கத்தின்<br />
உறவை தொடர்ந்திருக்கிறாயா?</p>
<p>பருவம் மாறும்போது<br />
உன்<br />
தோள்களில் பொதியும்<br />
தலையில் பொருளாதாரமும்<br />
புகுந்துவிட்டன!</p>
<p>தொடர் ஓட்டத்தில்<br />
உன் பொதியை<br />
மறு தலைமுறைக்கு<br />
மாற்றிக்கொடுக்கும் வரை,<br />
திருப்பங்களில் மட்டுமே<br />
திரும்புவாய்!</p>
<p>எல்லா சடங்குகளும்<br />
உன்<br />
விடுமுறை நாட்களில்<br />
நடந்தேறும்,<br />
பண்டிகை காலங்களை<br />
பட்டிமன்றங்களிலோ,<br />
பயணங்களிலோ திண்டாடுவாய்!</p>
<p>பால் பாக்கெட்டுக்கும்,<br />
பச்சரிசிக்கும்<br />
பட்ஜெட்டில்<br />
விலையேற்றும்போது<br />
உன் இரத்த அழுத்தம்<br />
கூடவே ஏறும்!</p>
<p>அரைகிரௌன்ட் நிலத்தில்<br />
நீ<br />
வீடு வாங்கும்போது,<br />
விஞஞானம் செவ்வாயில்<br />
குடிபெயர்ந்திருக்கும்!</p>
<p>நாடி ஜோசியத்திற்க்கான<br />
புத்தகம் வேண்டி<br />
மணிமேகலை பிரசுரத்திற்கு<br />
கடிதம்<br />
எழுதி காத்திருப்பாய்!</p>
<p>வருடத்திற்கு ஒருமுறை<br />
சித்திரா பௌர்ணமியிலோ,<br />
தை அமாவசையிலோ<br />
ஏதோ ஒரு சத்குருவிடம்<br />
நசிகேதனை கேட்டு வருவாய்!</p>
<p>நீ<br />
திரும்பி பார்க்கும்பொழுது,<br />
என்ன தேடுகிறாய்?</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மணலும் நுரையும் (SAND AND FOAM)–கலீல் கிப்ரான]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=223</link>
<pubDate>Sat, 07 Jun 2008 16:11:11 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=223</guid>
<description><![CDATA[The Sphinx spoke only once, and the Sphinx said,
&#8220;A grain of sand is a desert, and a desert is]]></description>
<content:encoded><![CDATA[<p>The Sphinx spoke only once, and the Sphinx said,<br />
"A grain of sand is a desert, and a desert is a grain of sand;<br />
and now let us all be silent again." I heard the Sphinx,<br />
but I did not understand.<br />
<strong><span style="color:#808080;"><br />
</span><span style="color:#808080;">ஸ்பிங்க்ஸ்  ஒருமுறை சொன்னது,<br />
"ஒரு மணல் துகளே ஒரு பாலைவனம்; ஒரு பாலைவனம்<br />
ஒரு மணல் துகள். நீ அமைதியாயிரு."ஸ்பிங்க்ஸ்<br />
சொன்னதை கேட்க முடிந்த என்னால் உணர முடியவில்லை.</span></strong></p>
<p>Long did I lie in the dust of Egypt, silent and unaware of the seasons.<br />
Then the sun gave me birth, and I rose and walked upon<br />
the banks of the Nile, Singing with the days and dreaming<br />
with the nights. And now the sun threads upon me with a<br />
thousand feet that I may lie again in the dust of Egypt.<br />
But behold a marvel and a riddle! The very sun that gathered<br />
me cannot scatter me. Still erect am I, and sure of foot<br />
do I walk upon the banks of the Nile.<br />
<strong><br />
<span style="color:#808080;">நான் எகிப்தின் புழுதிகளில் மௌனமாக,கால மாற்றங்களை<br />
பற்றி  எந்தவொரு பிரக்ஞை இல்லாமல் இருந்தேன்.<br />
பகலவன் என்னை பிரசவித்தான்,<br />
நைலின் கரைகளில்  நனைந்தேன்,<br />
பகல் எக்காளமாகவும்;இரவு கனாகாலமாகவும் கழிந்தன.<br />
சூரியனின் சுடுகரங்கள் என்னை  சுட்டெரிக்க<br />
நீண்டபொழுது அந்த பேரதிசயம் பூத்தது.<br />
ஆக்கியவனால் என்னை அழிக்க முடியவில்லை.<br />
நான் புதுப்புனலாய்  நைலோடு நடை பயின்றேன். </span> </strong></p>
<p>Remembrance is a form of meeting.<br />
Forgetfulness is a form of freedom.<br />
<strong><span style="color:#808080;"><br />
நினைவு என்பது  சந்திப்புதான்.<br />
மறத்தல் ஒரு வகையில் சுதந்திரம்.</span></strong></p>
<p>We measure time according to the movement of countless suns;<br />
and they measure time by little machines in their little pockets.<br />
Now tell me, how could we ever meet at the same place and<br />
the same time?<br />
<strong><span style="color:#808080;"><br />
நமது இரவு,பகல்  சூரிய சந்திரர்களின் வருகைதான்.<br />
அவர்களிடம் காலம் கணிக்க கருவிகள் இருக்கின்றன.<br />
இருந்தும்,அவர்களால்   அதே இடத்தில்,அதே வேளையில்<br />
மற்றுமொருமுறை  சந்திக்க முடியுமா? </span></strong></p>
<p>Space is not space between the earth and the sun to one who<br />
looks down from the windows of the Milky Way.<br />
<strong><br />
<span style="color:#808080;">பால்வெளியின் பலகணியில் இருந்து பார்ப்பவனுக்கு<br />
விண்வெளி என்பது பூமிக்கும்,சூரியனுக்குமான<br />
இடைவெளி அல்ல என்பது தெரியும். </span></strong></p>
<p><img style="vertical-align:text-bottom;" src="http://farm3.static.flickr.com/2017/2069697266_2a6c13cb7d.jpg?v=0" alt="" width="270" height="174" /></p>
<p>நுரைக்கும்...</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மணலும் நுரையும் (SAND AND FOAM )–கலீல் கிப்ரான்]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=218</link>
<pubDate>Tue, 03 Jun 2008 15:54:28 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=218</guid>
<description><![CDATA[It was but yesterday I thought myself a fragment quivering without rhythm
in the sphere of life.
Now]]></description>
<content:encoded><![CDATA[<p>It was but yesterday I thought myself a fragment quivering without rhythm<br />
in the sphere of life.<br />
Now I know that I am the sphere, and all life in rhythmic fragments moves within<br />
me.</p>
<p><strong><span style="color:#888888;">நேற்று   நான் இந்த பிரபஞ்சத்தின் லயமற்று<br />
துடிக்கும் ஒரு  துளியாக என்னை எண்ணினேன்;<br />
ஆனால் இக்கணம் நான்தான்  பிரபஞ்சம்,எல்லா உயிர்களும் நானே; </span></strong></p>
<p>They say to me in their awakening, "You and the world you live in are but a grain<br />
of sand upon the infinite shore of an infinite sea." And in my dream I say to them,<br />
"I am the infinite sea, and all worlds are but grains of sand upon my shore."</p>
<p><span style="color:#888888;"><strong>அவர்கள் விழித்திருக்கும்போது சொன்னார்கள்,<br />
" நீ இந்த உலகில், முடிவில்லாத<br />
பெருங்கடலின் கரையிலிருக்கும் ஒரு மணல் துகள்".<br />
அவர்களுக்கு பதில் என் கனவிலிருந்து<br />
"நான் ஒரு பெருங்கடல், எல்லா உலகங்களும் என்<br />
கரையின் மணல் துகள்கள்".</strong></span></p>
<p>Only once have I been made mute. It was when a man asked me,<br />
"Who are you?"</p>
<p><span style="color:#888888;"><strong>என் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் பேச்சற்றுப் போனேன்.<br />
"நீ யார்?" என என்னை ஒருவன் கேட்டபொழுது.</strong></span></p>
<p>The first thought of God was an angel.<br />
The first word of God was a man.</p>
<p><strong><span style="color:#888888;">ஒரு தேவதைதான் கடவுளின் முதல் எண்ணம்.<br />
ஒரு மனிதன்தான் கடவுளின் முதல் வார்த்தை.</span></strong></p>
<p>We were fluttering, wandering, longing creatures a thousand thousand<br />
years before the sea and the wind in the forest gave us words.<br />
Now how can we express the ancient of days in us with only<br />
the sounds of our yesterdays?</p>
<p><span style="color:#888888;"><strong>நாம் அமைதியிழந்து, ஏக்க பெருமூச்சுடன்<br />
யுகயுகமாய் இப்பெருங்கடலின்<br />
முன் சுற்றி திரிந்தோம்;<br />
பின்  கானகத்திலிருந்து வார்த்தைகள்<br />
வந்தது காற்றுதான் தந்தது.<br />
ஒராயிம் வருட ஆசைகளை<br />
நேற்று பிறந்த ஒசைகளால்  எப்படி சொல்வது?</strong></span></p>
<p>நுரைக்கும்…</p>
<p><img style="vertical-align:text-bottom;" src="http://farm3.static.flickr.com/2017/2069697266_2a6c13cb7d.jpg?v=0" alt="" width="259" height="174" /></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மணலும் நுரையும் (SAND AND FOAM )--கலீல் கிப்ரான் ]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=206</link>
<pubDate>Mon, 02 Jun 2008 15:41:01 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=206</guid>
<description><![CDATA[I am forever  walking upon these shores,
Between the sand and the foam,
The high tide will erase my ]]></description>
<content:encoded><![CDATA[<p>I am forever  walking upon these shores,<br />
Between the sand and the foam,<br />
The high tide will erase my foot-prints,<br />
And the wind will blow away the foam.<br />
But the sea and the shore will remain Forever.</p>
<p>நான் இந்த கரைகளில் மணலுக்கும்,நுரைக்கும்<br />
இடையே எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறேன்<br />
உயர்ந்த அலைகள் என் காலடித்தடங்களை அழித்துவிடும்,<br />
அதுபோலவே காற்று நுரையினை அடித்து சென்று விடும்.<br />
ஆனால் இந்த கடலும்,கரையும் எப்பொழுதும் இருக்கும்.</p>
<p>Once I filled my hand with mist.<br />
Then I opened it and looked, the mist was a worm.<br />
And I closed and opened my hand again, and behold there was a bird.<br />
And again I closed and opened my hand, and in its hollow stood a man with a<br />
sad face, turned upward.<br />
And again I closed my hand, and when I opened it there was naught but mist.<br />
But I heard a song of exceeding sweetness.</p>
<p>ஒருமுறை பனிப்புகையை  என்கைகளில் ஏந்தியிருந்தேன்.<br />
கைகளை விரித்து பார்த்தபோது பனிப்புகை ஒரு புழுவாய் இருந்தது<br />
மீண்டும் கைகளை மூடி திறந்தபோது ஒரு பறவையை பார்த்தேன்.<br />
திரும்பவும் கைகளை மூடி திறந்தபோது  அதனிடுக்கில் கவலை நிறைந்த முகத்துடன்<br />
மேல்நோக்கி பார்த்தபடி ஒரு மனிதன் இருந்தான்.<br />
நான் மீண்டும் கைகளை மூடி, திறந்தபொழுது அங்கே பனிப்புகையை தவிர ஒன்றுமில்லை.<br />
ஆனால் இனிமையிலும் இனிமையான ஒரு கானத்தை நான் கேட்டேன்.</p>
<p>நுரைக்கும்...</p>
<p><img src="http://farm3.static.flickr.com/2017/2069697266_2a6c13cb7d.jpg?v=0" alt="" width="260" height="174" /></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[என்ன கொடுமை சரவணன்..]]></title>
<link>http://paanmai.wordpress.com/2008/06/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/</link>
<pubDate>Sun, 01 Jun 2008 21:41:44 +0000</pubDate>
<dc:creator>ஸ்ரீராம் முரளி</dc:creator>
<guid>http://paanmai.wordpress.com/2008/06/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/</guid>
<description><![CDATA[கொடுமை கொடுமைனு யூட்யூபுக்கு போனா அங]]></description>
<content:encoded><![CDATA[<p>கொடுமை கொடுமைனு யூட்யூபுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்குன்னு ஆடுது :D</p>
<p><!--YouTube Error: bad URL entered--><!-- technorati tags begin -->
<p style="font-size:10px;text-align:right;">Tags: <a href="http://technorati.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88" rel="tag">கொடுமை</a>, <a href="http://technorati.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D" rel="tag">தமிழ்</a>, <a href="http://technorati.com/tag/%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE" rel="tag"> சினிமா</a>, <a href="http://technorati.com/tag/%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D" rel="tag"> அரசியல்</a>, <a href="http://technorati.com/tag/%20%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88" rel="tag"> நகைச்சுவை</a></p>
<p><!-- technorati tags end --></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நட்பைக்கூடத்தானே கற்பைப் போல எண்ணுவோம் - ஆண்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4273</link>
<pubDate>Wed, 28 May 2008 21:50:36 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4273</guid>
<description><![CDATA[தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம]]></description>
<content:encoded><![CDATA[<p>தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம் போனது தெரியாமல் சன் டிவி பார்த்ததில் தாமதமாகிப் போகிறது. இரவு வீட்டுக்கு திரும்பாமல், நண்பியின் இடத்திலேயே டேரா அடித்துவிடுகிறாள். செல்பேசியிலும் போதிய அளவு சிக்னல் கிடைக்காமல் படுத்துகிறது.</p>
<p>காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தோழியின் இல்லத்தில் உறங்கியதை கணவனிடம் சொல்கிறாள்.</p>
<p>தனக்குத் தெரிந்த அவளின் தலை பத்து நண்பர்களை அழைத்து விசாரிக்கிறான் புருஷன்காரன். அவர்களில் எவரிடத்திலும் மனைவி தங்கவில்லை.</p>
<p><span style="color:#ff0000;"><em>கொஞ்ச நாள் கழித்து...</em></span></p>
<p>கணவன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுகிறான். வீடு திரும்பியவுடன், சில நாள் முன்பு மனைவி சொன்ன அதே சாக்கை சொல்கிறான். 'நண்பனின் வீட்டில் போதை அதிகமாகி உறங்கிப் போனேன்'.</p>
<p>அவளும் அவனுடைய ஆத்மார்த்தமான அத்யந்த சினேகிதர்களைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.</p>
<p>எட்டு பேர் அவன் தன்னுடைய இடத்தில் சீட்டாடி களைத்து நித்திரை பயின்றதாக சொல்கிறார்கள். பாக்கி இரண்டு பேர் இன்னும் அவன் அங்கேதான் இருப்பதாக தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.</p>
<p><a href="http://www.imagerocket.net/blog/index.php/2008/04/17/why-men-have-better-friends/">அசல்</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[எவ்வளவுக்கெவ்வளவு அல்வாத்துண்டு உங்களுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை சேமித்து வைப்பதும்!”]]></title>
<link>http://kathambamaalai.wordpress.com/?p=482</link>
<pubDate>Thu, 22 May 2008 16:55:50 +0000</pubDate>
<dc:creator>muthulakshmi</dc:creator>
<guid>http://kathambamaalai.wordpress.com/?p=482</guid>
<description><![CDATA[ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசி]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://madippakkam.blogspot.com/2008/05/blog-post_22.html" target="_blank">ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண்டு குட்டியூண்டு மனிதர்களும் அவர்கள். அந்த இனிப்புக்கடையின் ஆறாம் எண் அறையில் பெட்டி பெட்டியாக, விதம்விதமாக அடுக்கிவைக்கப்பட்ட அல்வாதுண்டுகள் தான் அவர்களது வாழ்க்கை. தினமும் ஆறாம் எண் அறைக்கு வந்து அல்வாக்களை வயிறுமுட்டும் வரையில் தின்று அவர்களது வாழ்க்கை இனிமையாக கழிகிறது. “அல்வா துண்டுகள் சாப்பிடுவது எப்போதும் அலாதி இன்பமே!”</p>
<p>ஒரு நாள் திடீரென ஆறாம் எண் அறை காலியாகிக் கிடக்கிறது</a></p>
<p>அப்பறம் என்னாச்சு படிங்களேன்...அந்த கதையை..</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[வாழ்க்கை சக்கரம் - காமிக்ஸ்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4225</link>
<pubDate>Tue, 13 May 2008 02:27:17 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4225</guid>
<description><![CDATA[
நன்றி: PHD Comics: Vicious Cycle
]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/phd_comics-cartoons-vicious-cycle.gif"><img class="alignnone size-medium wp-image-4224" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/phd_comics-cartoons-vicious-cycle.gif?w=300" alt="Staying up Late Night &#38; Productivity" width="300" height="130" /></a></p>
<p><em>நன்றி</em>: <a href="http://www.phdcomics.com/comics.php?n=1015">PHD Comics: Vicious Cycle</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[எனது முதலாவது காதலி]]></title>
<link>http://niram.wordpress.com/?p=214</link>
<pubDate>Mon, 12 May 2008 07:12:31 +0000</pubDate>
<dc:creator>உதய தாரகை</dc:creator>
<guid>http://niram.wordpress.com/?p=214</guid>
<description><![CDATA[
தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் ]]></description>
<content:encoded><![CDATA[<p><img class="alignnone size-full wp-image-169" src="http://niram.wordpress.com/files/2007/11/cosmic1.jpg" alt="" width="460" height="130" /></p>
<p>தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…)</p>
<p>என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்’ என்ற அடிக்குறிப்போடு உங்களைச் சந்தித்த நான், அத்தொடரில் தொடர்பதிவுகளை இட முடியாமல் போனது பற்றி எனக்கும் கவலைதான். என்ன செய்ய… ஒன்றா.. இரண்டா.. பல மாதங்கள் தொடரிலமைந்த எந்தப் பதிவையும் பிரசுரிக்க முடியவில்லை. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் முறையாக இன்னொரு பிரபஞ்சத்தை சமைக்க முடியவில்லை. (பார்ரா… பிரபஞ்சத்தை சமைக்கப் போறாராம்.. ரொம்ப நக்கலாப் போச்சு…)</p>
<p><!--more தொடர்ந்து படிக்க... --></p>
<p>இதோ இன்னொரு பிரபஞ்சத்தின் மூன்றாவது பதிவு விரிகின்றது. உலகில் உணர்வுகளின் பிடிப்பில் அகப்பட்டு, தன்னையே இழக்காத சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கும் மனிதர்களைக் காண்பது அரிது. உணர்வுகளுக்கு அத்தனை சக்தியுண்டு. உணர்வுகளின் மிக உன்னதமானது அன்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உணர்வுகளின் மூச்சாய் அமைந்திருப்பதுவும் அதுவே. கோபம் என்பது உணர்வு என்றால் அதை தணிக்கக்கூடிய உணர்வு அன்புதான். இப்படி எந்த உணர்வாக இருந்த போதிலும் அவற்றை அந்நிலையிலிருந்து தம் நிலையாம் அன்பே உருவாய் அமைந்த நிலைக்குக் கொண்டு வருவது அன்பு என்ற உணர்வு ஒன்றேதான். (போதும்! போதும்! அன்புக்கு மார்க்கடிங் எக்ஸகடிவ் வேலை பார்க்கிறீங்களா உதய தாரகை?)</p>
<p><img class="alignnone size-full wp-image-215" src="http://niram.wordpress.com/files/2008/05/affection_edit.jpg" alt="" width="460" height="274" /></p>
<p>அன்பின் ஆரம்பத்தில் தான் அனைத்து உணர்வுகளும் அடங்குகின்றது. காதலும் அப்படித்தான். அன்பின் தீவிரம் தான் காதலாக வேண்டும். எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது, நான் எனது கிராமப் பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்து, தலைநகரத்தின் பிரபல பாடசாலைக்கு கல்வி கற்க வந்த காலம்! ஆஹா… அந்த நேரம் நான் வடித்த கண்ணீரை சேகரித்திருந்தால் வறட்சிக் காலங்களில் மின்சார துண்டிப்புக்களே நடத்தியிருக்கத் தேவையில்லை. சின்ன வயசில் (அது சின்ன வயசா?) உறவுகளைப் பிரிந்து வருகின்ற ஏக்கம்! வந்ததால் ஏற்பட்ட தாக்கம்!</p>
<p>நான் வீட்டிற்கு கடிதம் எழுத காகிதத்தை எடுத்தால் என் கண்களே முந்திக் கொண்டு காகிதத்தில் சித்திரம் வரைந்து கொள்ளும். காகிதத்தில் நானெழுதும் பேனா மையை, கண்ணீர் வர்ணச் சித்திரமாய் மாற்றியமைக்கும். பெற்றோரை, உற்றாரை பிரிந்து வந்த கவலையின் வெளிப்பாடுதான் அது! ஆனால், அந்தக் கவலை என்ற உணர்வு என்னைப் பல மாதங்கள் காதலித்தது தவிர்க்க முடியாத உணர்வுப் பகிர்வுதான். அப்போ உங்க முதலாவது காதலி கவலை என்றுதான் சொல்ல வர்ரீங்களா? என்று நீங்கள் கேட்க நினைப்பது போல் எனக்குத் தோனுகிறது. அவசரப்படப்படாது. கவலையைப் போய் எனது காதலி என்பேனா..? சொல்லுங்க.. நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்…</p>
<p>தலைநகரத்து பாடசாலையில் கற்ற நாட்களில் நான் சந்தித்த பாத்திரங்கள் எண்ணிலடங்காதவை தாம். அங்கே சந்தித்த ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் பொருத்தமான நேரங்களில் பொருத்தமான சம்பவங்களினூடாக உங்களிடம் பிரிதொரு பதிவில் பகிர்ந்து கொள்வேன். இந்தப் பதிவில் எனது முதலாவது காதலியைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.</p>
<p>நான் கற்றது ஆண்கள் பாடசாலையில் தான். எனது சகபாடி ஒருவன் அவனது தோழியைப் பற்றி தினமும் இடைவேளை நேரத்தில் வர்ணித்துக் கொண்டேயிருப்பான். அவன் வர்ணிப்புகளின் நான் புதைந்து போவேன். அந்த வர்ணிப்புகளில் அன்பு என்ற நிலையைத் தாண்டி தயவு, கீழ்படிவு, புத்திக்கூர்மை என்ற பண்புகளெல்லாம் குறித்த பெண்ணின் வழியே தொடர்ந்து மிளிரக் காண்பேன்.</p>
<p>அடப்பாவி.. அந்தச் சின்ன வயசிலேயே உனக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் வந்துவிட்டதா? என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்? வேணாம் சார். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எல்லாம் ஒரு பீலிங்ஸ்தான். (ஆனாலும், நீங்க எடுத்த வாக்கிலேயே இப்படியொரு கேள்வி கேட்டிருக்கக்கூடாது..) சரி.. சரி.. மேட்டருக்கு வர்ரேன்…</p>
<p>என் நண்பனின் வர்ணிப்புகளில் அவள் பற்றிய எனது கனவுகள் வானளாவப் பரந்து விரிந்தன. நண்பனின் வர்ணிப்புகளில் என்னைத் தொலைத்தேன். அவளின் குணங்களைக் கண்டு வியந்தேன். அக்குணங்களை அவள் வெளிப்படுத்தும் தருணத்தில் நானும் அவள் முன்னால் இருக்க வேண்டுமென்று கற்பனைக் கோட்டை கட்டினேன். நண்பன் வர்ணிப்புகளில், அவளின் கருமங்களில் என்றுமே பிழை இருந்ததில்லை என்றே சொல்லுவான். உண்மையைச் சொல்லப் போனால், நான் அவளின் குணங்களில் என்னைத் தொலைத்தேன். அவள் போன்ற ஒருவளை நானும் தோழியாகப் பெற வேண்டுமென ஆர்வங் கொண்டேன். (இதெல்லாம் ரொம்ப ஓவர் உதய தாரகை!)</p>
<p>நாட்கள் நகர்ந்தன. தலைநகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், என் நெஞ்சக்கூட்டின் நினைவுகளுக்குள் எல்லாம் அவள் செயல்கள்தான் நிரம்பி வழிந்தன. என் எண்ணங்கள் கூட, அவள் அதைச் செய்வாளா? இதைச் செய்வாளா? அப்படிச் செய்வாளா? இப்படிச் செய்வாளா? என்றெல்லாம் தங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டன. இப்படியாக எண்ணங்களையே கொள்ளை கொண்டவளாய் எனக்குள்ளேயே குடியிருந்தாள் அவள்.</p>
<p>கிராமத்து பாடசாலையில் நான். அது இன்னொரு இடைவேளை நேரம். கிராமத்துப் பாடசாலையில் ஆராதனை மண்டபத்தின் அருகால் நான் நடந்து செல்லுகையில், அம்மண்டபத்தின் அருகேயுள்ள கட்டிடத்தின் கண்ணாடிக் கதவு வழியாக ஒரு அதிசயம் கண்டேன். அது என் நண்பன் வர்ணித்த அவளே என்பேன். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், உண்மையாக அவளேதான் அக்கட்டடத்திற்குள் அடக்கமாக இருந்து கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் எதை அடைய வேண்டுமென ஆர்வம் கொள்கிறோமோ, மனப்பூர்வமாக விரும்புகிறோமோ அது எமக்கு எப்போதாவது கிடைக்குமென்பது திண்ணமென்பதை எனக்குணர்த்திய இன்னொரு சம்பவம் இது!</p>
<p>என் மனவானில் சிறகடித்துப் பறந்து அவளை கண்டதிலிருந்து எனக்கு ஒரே புளகாங்கிதம் தான். நாம் எதிர்பார்க்கும் எல்லாமும் எப்போதும் எமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஒருவேளையில் நாம் எதிர்பார்த்திருந்த எதுவும் கிடைக்கப் பெறும் போது, எமக்கு ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே சொல்லி விளக்கி விட முடியாது! அனுபவித்துப் பார்க்க வேண்டும்! (உங்கள் நினைவுகள் உங்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறிய தருணங்களைச் சுற்றிக் கொண்டு ஓடுகிறதல்லவா? ஆமாம். அந்த நினைவுகளில் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்… எத்துணை சுகம்… எத்துணை இனிமை…)</p>
<p>எனது பாடசாலையில் அவளைக் கண்ட நாளிலிருந்து எனக்கு அவளோடு தோழமை கொள்ள வேண்டுமென்ற ஆசைதான்! என்ன செய்ய… யார்தான் இதற்கு உதவப் போகிறார்கள்…?</p>
<p>ஆனாலும், அவள் முன்னிருந்து நான் சொல்வதை அவள் செய்யும் அழகை ரசிக்க வேண்டும். அதில் நான் வியந்து போக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கட்டாயம் நிறைவேறும் என்று உறுதியாக நான் நம்பியிருந்தேன். நம்பினார் கைவிடப்படுவாரா..? இல்லையே..</p>
<p>அவளின் முன்னிருந்து அவளோடு நேரடியாகப் பழகும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டேன். ஆனந்தமேயுருவாய் அவளருகே சென்றேன். (போதும்! போதும்..! எங்களுக்குப் பொறாமையாய் இருக்க….)</p>
<p>என்ன அதிசயம்! என் தலைநகரத்து பாடசாலையில் எனது நண்பன் வர்ணித்தவள் தானோ இவளென்று சந்தேகமெழுமளவில் அவள் ஒவ்வொரு அசைவும், நடவடிக்கையும் அமைந்திருந்தது. தினமும் அவளைச் சந்திக்க நான் திட்டமிட்டுக் கொண்டேன் (எல்லாம் பிளான் பண்ணித்தான் செய்வீங்களோ?). அவள் முன்னிருந்து அவள் செயல்களிலேயே வியந்து போக என்னை நான் தினமும் கண்டேன். அவளின் நடவடிக்கைகளை எப்படிச் சொல்வேன். அவளுக்கு நன்றாகப் பாடக்கூடத் தெரியும். நான் விரும்பும் பாடல்களை மட்டுமே மிகவும் இனிமையாகப் பாடுவாள். அவள் பாடல்களில் மெய்மறந்து திழைக்கலாம்.</p>
<p>அவள் அனைவருடனும் மிகவும் சரளமாகவும் இனிமையாகவும் பழகுவாள். ஆனால் அப்போது, அவளை ஒரு சிலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் சர்வகலையிலும் பாண்டித்தியம் பெற்றவளோ என்றே நான் சில வேளை எண்ணுவதுண்டு. அவளுக்கு அத்துணை அறிவு.. விவேகம்…! அந்தக் காலத்தில் அவளை விட அறிவுடையவர் யாருமிருந்திருக்க முடியாதென்றே என்னால் சொல்ல முடியும் (இதெல்லாம் ரொம்ப அதிகமான பில்ட் அப்). இத்தணைக்கும் எனக்கு அப்போது வயது வெறும் பதினான்கு மட்டுந்தான். (ரொம்ப குசும்புதான் உதய தாரகை!)</p>
<p>அவள் என்னைக் காதலித்தாலோ இல்லையோ நான் அவளைத் தீவிரமாகவே காதலித்தேன். ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாம் எதிர்பார்க்காத விடயங்கள் கூட வாழ்க்கையோட்டத்தில் எமக்கு இடம்பெறுவது தவிர்க்க முடியாததே! அப்படித்தான் அவளையும் நான் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!</p>
<p>அவளின் பெற்றோரோ உற்றாரோ அவளைக் கண்டிக்கவில்லை. அவளுடலில் ஏற்பட்ட திடீர் நோயின் காரணமாக, அவள் சிகி;ச்சை பெறுவதற்காக கிராமம் விட்டு தலைநகருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவள் சிகிச்சைக்காக சென்ற இடத்தையோ, அவளுக்கு ஏற்பட்ட நோயையோ நானறியேன்! அவள் மீது நான் கொண்டிருந்த காதல் என்னை அப்படிச் செய்ய வைத்திருக்கக்கூடாது. ஆனாலும், பிறகு அவளை நான் எனது பாடசாலையில் காணவேயில்லை. விசாரித்துப் பார்த்த போது சொன்னார்கள்: அவளுக்கு என் கிராமத்திற்கு வர இஸ்டமில்லையாம் என்று. அவள் என்னை ஏமாற்றினாளா? அல்லது நான் தான் அவளால் ஏமாந்தேனா? ஏமாற்றம் என்ற உணர்வின் தோற்றம் இங்கு தேவைதானா? என்றெல்லாம் எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள். (என்ன உதய தாரகை நீங்க லவ் ப்ரேக் என்று எங்களுக்குச் சொல்லவேயில்லை…?)</p>
<p>இன்றும் அவள் நினைவுகளோடே நானும் இருக்கிறேன். அதனால் தான் இன்று உங்களோடு அவள் நினைவுகளை பதிவாக்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் அவளைப் போன்ற பலரை இதுவரை சந்தித்திருக்கிறேன். அவளை விட விவேகமுடையவர்களைக் கூட சந்திந்திருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். ஆனாலும், நான் முதலாவதாகக் காதலித்த அவளை என்னால் மறக்க முடியவில்லை.</p>
<p>என்ன உதய தாரகை! அவள், அவள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கீங்க… உங்களின் முதலாவது காதலியின் பெயரைக் கொஞ்சம் எங்களிடம் சொல்லக்கூடாதா? என்று நீங்கள் கேட்பது போல் எனக்குத் தோனுகிறது.</p>
<p>நான் அவளை செல்லமாக, போ எயிட் சிக்ஸ் [Four Eight Six] என்றே அழைப்பேன். பொதுவாக அவளை எல்லோரும் கம்பியூட்டர் என்றே அழைப்பர். என்னது கம்பியூட்டரா?!! அப்போ நீங்க இவ்வளவு நேரமும் அவள் என்று சொன்னது கம்பியூட்டரைப் பற்றியா? புரிஞ்சிக்கிட்டாச் சரிதான்.. உதய தாரகை எங்களைக் கவுத்துப் போட்டியப்பா…ரொம்ப நக்கலாப் போச்சு…</p>
<p>இப்போது ‘அவள்’ என்று இக்கட்டுரையில் வரும் இடங்களில் ‘கம்பியூட்டர்’ என்பதைப் பிரதியிட்டு வாசித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை காதலாய் உருவகித்து, அதில் காதலியாய் கம்பியூட்டரை ஆக்கி உங்களோடு எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் வித்தியாசமான வில்லங்கத்தனமான முயற்சிதான்!</p>
<p>நீங்களும் சில விடயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அதுபற்றி நிறத்தோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அனுபவங்களை அனுபவித்து ஆனந்தம் காண்போமா?</p>
<p>இன்னொரு பிரபஞ்சத்தின் இன்னொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.</p>
<p>- உதய தாரகை</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[என்ன செய்வது??]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=183</link>
<pubDate>Sat, 10 May 2008 03:58:33 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=183</guid>
<description><![CDATA[எனக்குத் தெரியவில்லை,
பாதசாரிகளுக்க]]></description>
<content:encoded><![CDATA[<p>எனக்குத் தெரியவில்லை,<br />
பாதசாரிகளுக்கான<br />
பாதையில்<br />
படுத்திருப்பவளை<br />
தாண்டியும்,<br />
சுற்றியும் செல்கிறீர்கள்,<br />
நான் என்ன செய்வது?</p>
<p><img src="http://farm2.static.flickr.com/1310/1477792697_3f30bb9933.jpg?v=0" alt="" width="226" height="172" /></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[உதிர்ந்த பூக்கள்..]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=182</link>
<pubDate>Sat, 10 May 2008 03:23:36 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=182</guid>
<description><![CDATA[தண்ணீர் ஊற்றியும்,
உரம் வைத்தும்,
நீ
க]]></description>
<content:encoded><![CDATA[<p>தண்ணீர் ஊற்றியும்,<br />
உரம் வைத்தும்,<br />
நீ<br />
கனிகளை<br />
பறித்துக் கொண்டாய்,<br />
உதிர்ந்துவிட்ட<br />
பூக்களிடம்<br />
என்றாவது<br />
நன்றி சொன்னாயா??</p>
<p><img src="http://farm1.static.flickr.com/118/292323360_e6e05a6aa0.jpg?v=0" alt="" width="221" height="163" /></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[செவ்வாழையில் கனிந்த முதுமை...]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=179</link>
<pubDate>Tue, 06 May 2008 01:42:11 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.wordpress.com/?p=179</guid>
<description><![CDATA[பணிபடர்ததொரு குளிர்காலையில்
கொல்லை]]></description>
<content:encoded><![CDATA[<p>பணிபடர்ததொரு குளிர்காலையில்<br />
கொல்லையிலிருந்த செவ்வாழையை<br />
பார்த்து சிலிர்த்திருந்தேன்,<br />
பின்பு<br />
காட்டு மரங்கள் தேவலாம்<br />
தண்ணீர் ஊற்றி மாளவில்லை,<br />
என்று அலுத்துக்கொண்டேன்!<br />
அருகிருந்தவள்,<br />
கனி தராத மரங்களை<br />
வேரோடு பிடுங்கிட சொன்னாள்,<br />
உடல் நடுங்கியது<br />
கனிகள்  தராத மரமும்<br />
உழைப்பை தராத முதுமையும்<br />
ஒரே நேரத்தில் என்னை<br />
அழவைத்தது, உங்களை?<br />
எனக்கு வேண்டாம்<br />
இது போன்றதொரு காலை!<br />
அவளிடம் சொல்லிவிட்டேன்<br />
நீ காபி கொடுக்க<br />
கொல்லைக்கு வராதே என்று!</p>
<p><img src="http://farm1.static.flickr.com/76/152880651_6f2d655ebf.jpg?v=0" alt="" width="286" height="206" /></p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
