<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>போராட்டம் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/போராட்டம்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "போராட்டம்"</description>
	<pubDate>Sun, 06 Jul 2008 14:12:17 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[கூட்டு குடிநீர் திட்டத்தை வலியுறுத்தியும்,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் நடந்த போராட்ட விவரங்கள்...]]></title>
<link>http://dmdk.wordpress.com/?p=10</link>
<pubDate>Fri, 11 Apr 2008 09:09:04 +0000</pubDate>
<dc:creator>dmdk</dc:creator>
<guid>http://dmdk.wordpress.com/?p=10</guid>
<description><![CDATA[
தர்மபுரி ஏப்ரல் 10:
இந்த ஆர்ப்பாட்டத்]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://dmdk.files.wordpress.com/2008/04/dharmapuri.jpg"><img class="aligncenter size-full wp-image-9" src="http://dmdk.wordpress.com/files/2008/04/dharmapuri.jpg" alt="தலைவர் தர்மபுரியில்" width="510" height="341" /></a><br />
தர்மபுரி ஏப்ரல் 10:</p>
<p>இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட செயலாளர் டாக்டர் வி.இளங்கோவன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p>
<p>"கர்நாடக தேர்தல் முடியும் வரை குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஏன் காத்திருக்க வேண்டும்' என்றும்,</p>
<p>மத்திய,மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டன. வேலை வாய்ப்பை உருவாக்க ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதி படைத்தோர், பணம் கொடுத்து வேலை பெறுகின்றனர். இது குறித்து சட்டசபையில் பேசினால், பதில் கிடைக்கவில்லை.</p>
<p>"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்று பெருமையாக பேசுவதுண்டு. இங்கே நிலைமையை பாருங்கள். சொந்த ஊரில் வேலைவாய்ப்பு இன்றி தர்மபுரி மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையுள்ளது.அண்டை மாநிலங்களுடன் முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி ஆறு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளன. மத்திய அரசு இதைக் கண்டிப்பதில்லை. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு 1998ல் ஒப்பந்தம் செய்து, பெங்களூருக்கு குடிநீர் கொண்டு சென்று விட்டனர். பத்தாண்டுகளாக நாம் என்ன செய்தோம். ஒகேனக்கல் பிரச்னையில் "தமிழர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, கர்நாடக தேர்தல் வரையில் அமைதி காப்போம்' என முதல்வர் கூறியுள்ளார். இதில் அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசியிருக்கலாம்.</p>
<p>மழை பாதித்த போது, எதிர்க்கட்சிகளை அழைத்து கருத்து கேட்கவில்லையா. ஒகேனக்கல் பிரச்னையில், "யார் நிர்பந்தம் காரணமாகவும் சொல்லவில்லை' என, முதல்வர் தெரிவித்தார். வீரப்ப மொய்லி மறுநாளே, "சோனியா கேட்டு கொண்டதால் திட்டம் நிறுத்தி வைத்திருப்பதாக' கூறுகிறார். மக்களை ஏமாற்றும் அரசுகள் நடந்து வருகின்றன.வார்த்தை ஜாலத்தால் தமிழக மக்களை முதல்வர் ஏமாற்றி வருகிறார். மக்களை ஏமாற்றும் அரசே நடந்து வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டில் தான் நிதி பெற வேண்டுமா. . கர்நாடக தமிழர்கள் வாழ்வதற்கு ஏற்ப, மாற்றி கொண்டனர். கர்நாடக தேர்தல் வரை திட்டத்தை நிறைவேற்ற ஏன் காத்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவான கவர்னர் ஆட்சி தானே கர்நாடகாவில் நடக்கிறது. 1971ல் காவிரி நீர் பங்கீட்டில் இடைக்கால தீர்ப்பு வந்த போது, கர்நாடகாவில் தேர்தல் வந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, நீதிமன்றத்துக்கு செல்வதை இந்திராகாந்தி தடுத்தார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது சோனியா தடுத்துள்ளார். மாமியார், மருமகளுக்காக தமிழக மக்கள் வஞ்க்கப்பட்டுள்ளனர்.</p>
<p>நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் குடிநீர் திட்டம் கிடைக்காது. அரசுகளும், தேசிய கட்சிகளும் மக்களை எப்படி ஏமாற்றி வருகின்றனர் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த போராட்டம். திட்டத்துக்கு கர்நாடகாவில் கிருஷ்ணாவும், எடியூரப்பாவும், தேவகவுடாவும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, ஆட்சிக்கு வந்தால் எப்படி அவர்கள் ஒப்புதல் அளிப்பார்கள்.தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள். சிறப்பு பொருளாதார மண்டலம், விமானநிலையம் விரிவாக்கம் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு பயந்து அரசு பின் வாங்கி வருகிறது. பதவியை தக்க வைத்து கொள்ள நிர்பந்ததுக்கு கட்டுப்பட்டு வருகிறது. இவ்வாறு தலைவர் விஜயகாந்த் பேசினார்.</p>
<p><a href="http://dmdk.files.wordpress.com/2008/04/dharmapuri1.jpg"><img class="aligncenter size-medium wp-image-12" src="http://dmdk.wordpress.com/files/2008/04/dharmapuri1.jpg" alt="விஜயகாந்த்,தேமுதிக,dmdk,vijayakanth" width="300" height="199" /></a><br />
மேலும்<br />
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் நாடகமாடுகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளோரைடு என்ற நச்சுத்தன்மை கலந்த தண்ணீரை மக்கள் குடித்து எலும்பு, பல், கண் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் தானே கேட்கிறார்கள். வேறு என்ன ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்? ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்பது இந்த மாவட்ட மக்களின் ஜீவாதாரம். அது ஏன் மறுக்கப்படுகிறது?</p>
<p>பால்,பேருந்து கட்டணம்,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது..மறைமுகமாக பேருந்து கட்டணம் உயர்த்தபட்டுள்ளது,தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,தொடக்க கல்வியில் 64 இலட்சம் குழந்தைகள் படித்தபோதும் ,12 ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 இலட்சம் மாணவர்கள் தான் எழுதுகின்றனர்,எனவே சமச்சீர் கல்விமுறையை கொண்டுவருவது அவசியமாகும்,<a href="http://dmdk.files.wordpress.com/2008/04/vj.jpg"><img class="aligncenter size-medium wp-image-11" src="http://dmdk.wordpress.com/files/2008/04/vj.jpg" alt="விஜயகாந்த்,vijayakanth,dmdk,தேமுதிக" width="300" height="225" /></a></p>
<p>பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. புதிய ரத்தம், புதிய சிந்தனைகளுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். தேசிய கட்சிகளை நம்பாதீர்கள். ஒரு தடவை ஆட்சி மாற்றத்தை மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்படுத்துங்கள். தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போட்டு போட்டு நாம் ஏமாந்து விட்டோம். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சரியான தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.</p>
<p>இவ்வாறு புரட்சிக்கலைஞர் திராவிடன் விஜயகாந்த் பேசினார்.</p>
<p><a href="http://dmdk.files.wordpress.com/2008/04/channaidmdk.jpg"><img class="aligncenter size-medium wp-image-13" src="http://dmdk.wordpress.com/files/2008/04/channaidmdk.jpg" alt="chennaidmdk,dmdk,vijayakanth,தேமுதிக,விஜயகாந்த்" width="300" height="200" /></a></p>
<p>சென்னை :ஏப்ரல் 10</p>
<p>ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கு.நல்லதம்பி முன்னிலை வகித்தார்.</p>
<p>ஆர்ப்பாட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-</p>
<p>ஒகேனக்கல் திட்டம்</p>
<p>ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் 1998-ல் கர்நாடகத்தால் ஒப்பு கொள்ளப்பட்ட திட்டம். கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் திட்டத்தை நிறைவேற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்போது இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்கிறார்கள். குடிக்கும் தண்ணீரை கூட, தர மறுக்கிறார்கள்.</p>
<p>தமிழ்நாடு அரசு கன்னட வெறியர்களின் கோரிக்கைகளை ஏற்று, திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்த பிரச்சினையை தலையிட்டு தீர்க்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்கும் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.</p>
<p>தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நம்பிக்கை நட்சத்திரம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் கேடயம் தே.மு.தி.க. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்களிடையே கட்டாயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.</p>
<p>இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கா தர்மபுரியில் தேமுதிக வரும் 10ம் தேதி எழுச்சி ஆர்ப்பாட்டம்]]></title>
<link>http://dmdk.wordpress.com/?p=6</link>
<pubDate>Mon, 07 Apr 2008 06:09:39 +0000</pubDate>
<dc:creator>dmdk</dc:creator>
<guid>http://dmdk.wordpress.com/?p=6</guid>
<description><![CDATA[
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆளும]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://dmdk.wordpress.com/files/2008/04/captan.jpg"><img class="aligncenter size-full wp-image-7" src="http://dmdk.wordpress.com/files/2008/04/captan.jpg" alt="" width="351" height="302" /></a><!--more--></p>
<p>தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகின்ற 10ம் தேதி  அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் அலுவலகம் முன்பு தேமுதிகவின் சார்பில்  எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் அந்த அந்த மாவட்ட செயலாளர்கள்  தலைமையில் நடக்க உள்ளதாக தேமுதிக பொது செயலாளர் திரு.இராமு வசந்தன் தெரிவித்தார்,</p>
<p>மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலைவர் திராவிடர் கேப்டன்விஜயகாந்த் தலைமை தாங்குவார் எனவும்,</p>
<p>மாநில நிர்வாகிகள் , சார்பு அணிகள்,தலைமக்கழக பேச்சாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என்றும் கூறினார்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பொறுத்தது போதும்]]></title>
<link>http://vijaygopalswami.wordpress.com/?p=7</link>
<pubDate>Sun, 06 Apr 2008 05:50:41 +0000</pubDate>
<dc:creator>vijaygopalswami</dc:creator>
<guid>http://vijaygopalswami.wordpress.com/?p=7</guid>
<description><![CDATA[தமிழன் அடிபட்டது மட்டுமே தலைப்பு செய]]></description>
<content:encoded><![CDATA[<p>தமிழன் அடிபட்டது மட்டுமே தலைப்பு செய்தியாய்ப் பார்த்துக் கொதித்துக் கொண்டிருந்த என் நெஞ்சு, தமிழன் திருப்பி அடித்ததைப் பார்த்து குளிர்ந்த்து போனது இப்போதுதான். நண்பர்கள் நேரிலும் தொலைபேசியிலும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.</p>
<p>சங்கீதா குழும உணவகங்கள், டாடா உடுப்பி உணவகங்கள், கன்னட சங்கப் பள்ளிக்கூடம் ஆகியவை தாக்கப்பட்டதை அறிந்தபோது தமிழனுக்கு சொரணை வந்துவிட்டது என்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தவறுதான் ஆனாலும் தமிழன் எத்தனை காலம் தான் அடி வாங்கிக்கொண்டே இருப்பது. இப்படியாவது எதிர்வினை காட்ட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.</p>
<p>இப்போது அடித்துவிடலாம், உதைத்துவிடலாம் என்று பேசி இருக்கிறார் கன்னடத்து சூப்பர் ஸ்டார். இதே சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டில் விளையாடிய  விளையாட்டுகளையும் மறந்த்துவிடக் கூடாதல்லவா.</p>
<p>உடுப்பி ஓட்டலில் விழுந்த அடி போயஸ் கார்டனில் இருந்த சூப்பர் ஸ்டாரை பேண்ட்டில் ஒன்னுக்கு இருக்க வைத்ததா இல்லையா? இல்லையென்றால் வந்திருப்பாரா உண்னாவிரதத்துக்கு? இதே போல திரை உலகம் நெய்வேலியில் போராடிய போது என்ன செய்தார் நமது கன்னடத்து சூப்பர் ஸ்டார். தனியாக சென்னையில் உண்னாவிரதம் இருக்கிறேன் என்று சில்லரை அரசியல் செய்தார்.</p>
<p>சூப்பர் ஸ்டாரின் தனி ஆவர்தனத்துக்கு எஸ்.எம். கிருஷ்னாவிடமிருந்து பாராட்டு மழை வந்தது. உண்மையாய் போராடிய சத்தியராஜ், பாரதிராஜா ஆகியோர் உயிரோடு இருந்த போதே தெவசம் நடத்தினார்கள். வாயைத் திறந்து ஒரு வார்தை கண்டித்தாரா இந்த சூப்பர் ஸ்டார்.</p>
<p>இப்போது பல பேரைப் புருவம் உயர்த்த வைக்கும் கேள்வி, எந்த தைரியத்தில் சூப்பர் ஸ்டார் இந்த உண்னாவிரதத்தில் கலந்து கொண்டார் என்பது தான். பதில் மிக எளிமையானது. இரண்டே விஷயங்கள் தான். ஒன்று, தியாகராய நகருக்கு கல்லையும் கட்டையையும் எடுத்துக் கொண்டு போனவர்கள் போயஸ் தோட்டத்துக்கும் வந்துவிடுவார்களோ என்ற பயம். இன்னொன்று, தான் தனியாக உண்னாவிரதம் இருந்த போது பாராட்டியதைப் போலவே, இப்போதும் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் கன்னடர்கள் தன்னைப் பாராட்டுவார்கள் என்று எண்ணியிருக்கலாம். அல்லது தன்னுடைய படங்களுக்கு லன்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட அகில உலக மார்க்கெட் இருக்கும் போது கர்நாடகா மாநிலம் கைவிட்டுப் போனால் ஒன்றும் குடிமுழுகி விடாது என்ற வியாபாரக் கணக்காகக் கூட இருக்கலாம்.</p>
<p>இதற்கு சிவாஜி படத்தின் புள்ளி விபரங்களே சாட்சி. தமிழ் நாட்டை விடவும் ஆந்திராவுக்கு ஐந்து பிரிண்ட்டுகள் அதிகம். ஆங்கிலப் படங்களுடன் போட்டியிட்டு முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படம் சிவாஜி. நூறு கோடியை நெருங்கிய சிவாஜி படத்தின் வியாபாரம், ஆகியவை தந்த தெம்பு தான் சூப்பர் ஸ்டாரை உண்னாவிரத மேடை வரை அழைத்து வந்தது.</p>
<p>”அவ்வளவு உணர்ச்சி மயமாக பேசினாரே சூப்பர் ஸ்டார்” என்று கேட்கிற அப்பாவி ஜந்துக்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகிறேன், சூப்பர் ஸ்டார் ஒரு சிறந்த வியாபாரி, அதை விடவும் சிறந்த நடிகர். ஆறிலிருந்து அறுபது வரை, நல்லவனுக்கு நல்லவன் போன்ற ஒரு சில படங்களை மட்டுமே சூப்பர் ஸ்டாரின் சிறந்த நடிப்புக்கு உதாரணம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களே ஆனால், youtube மற்றும் google videosல் தேடிப் பாருங்கள். ஏப்ரல் நாலாம் தேதி சேப்பாகத்தில் பதிவு செய்யப்பட்ட அவருடைய சிறந்த நடிப்பு காணக் கிடைக்கும்.</p>
<p>சத்தியராஜ், வைரமுத்து போன்றவர்களின் பேச்சு கவனிக்கத் தக்கதாக அமைந்திருந்தது. சத்தியராஜின் பேச்சில் நகைச்சுவை இருந்தாலும், அங்கே அவரது வலியையும் உணர முடிந்தது. பெரியாராகவே நடித்தவர் பெரியாரைப் போலவே மற்றவர்கள் தொடப் பயப்படும் விஷயங்களையும் தைரியமாகவே தொட்டுப் பேசினார். வைரமுத்துவின் பேச்சு வரலாற்று ஆதாரங்களுடன் சமகால ஆதாரங்களையும் எடுத்துக் காட்டியாது. சூப்பர் ஸ்டாரை தூக்கிப் பிடிக்கிற வேலை உங்களுக்கு எதற்க்கு கவிஞரே. உறுத்துகிறது. சூப்பர் ஸ்டார் படத்தில் பாட்டெழுதினால் தான் உங்களை நாங்கள் மதிப்போமா? தாயாக, பாட்டியாக உணர்ச்சிமயமாக நடிக்கக் கூடிய மனோரமா அவர்கள் நடிப்பில்லாமல் பேசிவிட்டுப் போனார். பேச்சின் இடையே, கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழர்கள் அன்போடு அழைக்கும் சரோஜா தேவிக்கு நேர்ந்த அவமானத்தையும் கண்டித்தார். இது தான் தமிழனின் உள்ளம், தமிழச்சியின் உள்ளம் என்று அவர்களும் புரிந்து கொள்ளட்டும்.</p>
<p>”கம்யூனிஸ்ட்டுகளைப் போல் நீங்களும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று கலைஞருக்கு சரத்குமார் விடுத்த அழைப்பு வரவேற்கத் தக்கது. ஏற்பதும் மறுப்பதும் கலைஞர் கையில். மனோரமா, சரத்குமார் போன்றோர் சூப்பர் ஸ்டாருக்கு அந்த “ஒரு கோடி” ஸ்டண்ட்டை நினைவுபடுத்தியதும் பாராட்டத் தக்கது.</p>
<p>தமிழ் நடிகர்களின் உண்னாவிரதத்திற்குப் போட்டியாக கன்னட நடிகர்களும் போராட்டம் அறிவித்திருந்த போதும் (போராட்டம் தோல்வியடைந்தது வேறு விஷயம்), கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், முரளி, அர்ஜுன் போன்றோரும் இந்த உண்னாவிரத மேடைக்கு வந்திருந்தது பாராட்டத் தக்கது.</p>
<p>இதே தமிழ்த் திரைஉலகைக் குறித்து எனக்கு ஒரு கோபமும் உண்டு. மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அங்கே கலை நிகழ்ச்சி நடத்தச் சென்றது தான் அது. இந்த போராட்டத்திற்காக அந்த முட்டாள்தனத்தை தமிழர்கள் மன்னிப்பார்களாக.</p>
<p>தமிழன் கர்நாடகாவில் அடிபட்டால் மட்டுமல்ல, இலங்கையில் அடிபட்டாலும், மலேசியாவில் அடிபட்டாலும், இதே போன்ற ஓற்றுமையைக் காட்ட வேண்டும். கன்னடர்கள் வாலாட்டும் ஒவ்வொரு முறையும் இதே ஒற்றுமை தொடர வேண்டும்.  இதுவரை நாம் பொறுத்தது போதும் . . .</p>
<blockquote><p>இப்பதிவு சனிக்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப் பட்டது. திங்கட்கிழமை என் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக சூப்பர் ஸ்டாரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார். அவருடைய படங்கள் கர்நாடகத்தில் ஓடவில்லையென்றால் அவருக்கு ஒரு நஷ்டமும் இல்லையாம்.</p></blockquote>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Fitna - Prabhakaran: Movies]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4111</link>
<pubDate>Thu, 03 Apr 2008 04:41:02 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4111</guid>
<description><![CDATA[
நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons
தொட]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/04/ted-rall-koran-quran-mohammed-censor-expression.gif" title="ted-rall-koran-quran-mohammed-censor-expression.gif"><img src="http://snapjudge.wordpress.com/files/2008/04/ted-rall-koran-quran-mohammed-censor-expression.gif" alt="ted-rall-koran-quran-mohammed-censor-expression.gif" /></a></p>
<p><i>நன்றி</i>: <a href="http://www.gocomics.com/tedrall/2008/03/29/">Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons</a></p>
<p><i>தொடர்புள்ள பதிவு</i>: <a href="http://www.writerpara.net/?p=51">Fitna - தேவையற்ற அச்சுறுத்தல் &#124; Pa. Raghavan</a></p>
<p><i>தொடர்பில்லாத பதிவு</i>: <a href="http://balajiulagam.blogspot.com/2008/03/blog-post_27.html">குப்பை வலை: பாலாஜி சித்ரா கணேசன்</a>: "'பிரபாகரன்' வளர்க! பிரபாகரன் ஒழிக!"</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Dor (நூல்) - விமர்சனம்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4061</link>
<pubDate>Sat, 22 Mar 2008 03:53:08 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4061</guid>
<description><![CDATA[நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை.  பார]]></description>
<content:encoded><![CDATA[<p>நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை.  பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.</p>
<p>ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:</p>
<ul>
<li><a href="http://snapjudge.wordpress.com/files/2008/03/dor-2006-5b-1_1188030619.jpg" title="dor-2006-5b-1_1188030619.jpg"><img src="http://snapjudge.wordpress.com/files/2008/03/dor-2006-5b-1_1188030619.thumbnail.jpg" alt="dor-2006-5b-1_1188030619.jpg" align="right" /></a><b>ஜீனத் </b>ஆக நடித்த <font color="#ff0000">குல் பனாக் </font>(Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.</li>
<li>பல மோசமான படங்களில் <font color="#ff0000">ஆயிஷா தகியா</font>வை பார்த்து 'நடிப்பு வராத பொண்ணு' போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!</li>
<li>'Dutch courage' ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் 'ஐ லவ் யூ' சொல்லும் <font color="#ff0000">ஷ்ரேயஸ் தல்பாடே</font>வும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது 'நடக்காது!' என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.</li>
<li><font color="#ff0000">வசனங்கள்</font>: எளிமை. ஆனால், உணர்ச்சி &#38; எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.</li>
<li>படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) <font color="#ff0000">மலையாளப் </font>படமாம் (என்ன படம்?)</li>
<li><font color="#ff0000">தமிழ்ப்பதிவர் </font>எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; 'ராத்திரி பத்து மணிக்கு' என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி...</li>
<li><font color="#ff0000">சினிமாத்தனம் </font>இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே</li>
</ul>
<p>காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது... இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.</p>
<p><i>புகைப்படம்</i>: <a href="http://in.movies.yahoo.com/movies/Dor/moviestills/photo-gallery-9832.html">யாஹு</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Malaysia, Affirmative Action, Ethnicity, Religion &amp; Election Results]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=3995</link>
<pubDate>Wed, 12 Mar 2008 04:36:05 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=3995</guid>
<description><![CDATA[பிபிசி செய்தி: பினாங் மாநிலத்தில் இந]]></description>
<content:encoded><![CDATA[<p><i>பிபிசி செய்தி</i>: <b>பினாங் மாநிலத்தில் இந்திய இனத்தவருக்கு சாதகமான முடிவு</b></p>
<p>மலேசியா வாழ் இந்திய இனத்தவர்களை விட மலாய் இனத்தவர்களுக்கு, பெருஞ்சலுகைகள் வழங்கும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை தாங்கள் இனி மேலும் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று மலேசியாவின் பினாங் மாநிலம் அறிவித்துள்ளது.</p>
<p>கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் பிரதமர் <font color="#ff0000">அப்துல்லாஹ் படாவிக்கும்</font>, அவரது ஆளும் கூட்டணிக்கும், பலத்த இழப்புகளை ஏற்படுத்திய எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள 4 மாநிலங்களில், பினாங்கும் ஒன்று.</p>
<blockquote><p>வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும், மலாய் இனத்தவருக்கு சாதகமான கொள்கைகளை மலேசியா கடந்த 40 வருடங்களாக கடைப்பிடித்து வருகிறது. மலேசியா இனப்பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதாக மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினர் கண்டித்திருக்கிறார்கள்.</p></blockquote>
<hr />
<p><b>கொஞ்சமாய் பேக்கிரவுண்ட், நடப்புகள், அலசல்</b>:</p>
<p>1. <font color="#ff0000">இங்கே ஆரம்பிக்கவும்</font>: <a href="http://tbcd-tbcd.blogspot.com/2007/12/tbcd.html">TBCD பார்வை : 'மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !'- உன்மை என்ன...?</a>: பின்னூட்டத்தில் எழுந்த கேள்விகளுக்கு விடையும் கிடைக்கும்:</p>
<blockquote><p>மலேசிய அரசு சிறுபான்மைகளுக்கான உரிமை சட்டத்தை அமல் படுத்துகிறதா? தமிழர்களைவிட அதிகமாக உள்ள சீனர்கள் நிலை என்ன? மலேசிய அரசு தன்னனை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டு உள்ளதா?</p></blockquote>
<p>2. <font color="#ff0000">அடுத்ததாக</font>: <a href="http://tbcd-tbcd.blogspot.com/2007/12/blog-post_18.html">மலேசிய தமிழர்கள் மலேசிய அரசிடம் வைத்த கோரிக்கைகள் என்ன..?</a></p>
<p>3. <font color="#ff0000">மேலும் மேலும் பின்னணி</font>: <a href="http://engineer2207.blogspot.com/2007/12/blog-post.html">THe WoRLD oF .:: MyFriend</a>: "மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்"</p>
<hr />
<p><b>இனி சில தமிழ்ப்பதிவுகள்:</b></p>
<p>1. <a href="http://www.malaysiaindru.com/?p=202">இந்தியர்களின் குரலை நசுக்கியவர் சாமிவேலு - மகாதீர்</a> - <b> - மறுமொழியில்</b>: "சாமிவேலு இந்தளவிற்கு வளர்வதற்கும் நம் சமூகத்தை நாசம் செய்வதற்கும் துணை நின்றவர்களில் <font color="#ff0000">மகாதிரும் </font>ஒருவர். இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்! ஏன், 90களில் சீன அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்த போது கூட இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை இரண்டாகவோ மூன்றாகவோ அதிகரிக்கவில்லை?"</p>
<p>2. <a href="http://tbcd-tbcd.blogspot.com/2008/03/blog-post_11.html">ஜடாயு ஐயா கக்கும் விசவாயு</a> - <b>மறுமொழியில்</b>: "மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்."</p>
<p>3. <a href="http://www.malaysiaindru.com/?p=289#more-289">இந்தியர்களுக்கு அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் - 128 அரசு சார்பற்ற இந்திய அமைப்புகளின் கோரிக்கை</a> - <b>மறுமொழியில்</b></p>
<ul>
<li>இஸா சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டோரை உடனே <font color="#800080">விடுவிக்க </font>ஆவன செய்யுங்கள்.</li>
<li>இஸா சட்டத்தை <font color="#800080">ரத்து </font>செய்ய மத்திய அரசுடன் போராடுங்கள்.</li>
<li>மாநில ஆட்சி மன்றத்தில் அனைத்து இனங்களுக்கும் <font color="#800080">சமவாய்ப்பைக் </font>கொடுங்கள்.</li>
<li>மக்களின் குறைகளை செவி கொடுத்துக் கேளுங்கள். தீர்வு காணுங்கள்.</li>
<li>1957-க்குப் பின்னர் பிறந்த <font color="#800080">அனைவரும் பூமிபுத்ரா </font>அந்தஸ்தைப் பெறச்செய்யுங்கள்.</li>
<li>நாட்டு வளம் அனவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.</li>
<li>இனப்பாகுபாட்டை ஒழியுங்கள். இன ஏளனம் செய்வதை தடுக்க ஆவன செய்யுங்கள்.</li>
<li>விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள், முடிந்தால் <font color="#800080">விலை குறைப்பை </font>அமல்படுத்துங்கள்.</li>
<li>நாட்டு வளம் விரயமாக்கப்படுவதை கட்டுப்படுத்துங்கள்.</li>
<li>மாநில அரசின் கடுப்பாட்டில் உள்ள <font color="#800080">“டோல்” </font>நிலையங்களை மூடுங்கள்.</li>
</ul>
<hr />
<p>4. <a href="http://tbcd-tbcd.blogspot.com/2008/03/blog-post_06.html"><b>டிபிசிடி</b>: மலேசியத்தமிழர்களின் மக்கள் சக்தி உணர்ச்சியும், மலேசியத் தேர்தலும்</a>: "மலேசியாவில் கடந்த 50 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில், <font color="#ff0000"><b>பரிசான நேசுனல் </b></font>என்ற <b> (Barisan Nasional - BN, the National Front) தேதிய முன்னணிக் </b>கூட்டணியே ஆண்டு வந்திருக்கிறது. கிளாந்தான் என்னும் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும், இந்தக் கூட்டணியே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.<br />
...<br />
<font color="#008000">அன்வர் இப்ராகிம் </font>தலைமையில் <font color="#008000"><b>கெடிலான் </b> </font>(Parti Keadilan Rakyat - PKR, People's Justice Party) என்ற கட்சி இம்முறை பரிசான் நேசனலின் ஆதிக்கத்தை அசைக்கும் நோக்கோடு, மற்றைய எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருமுனை களமாக மாற்ற முயன்று வருகின்றனர்."</p>
<p>5. <a href="http://tbcd-tbcd.blogspot.com/2008/03/blog-post_09.html">டிபிசிடி: மலேசியத் தமிழர்கள் தடுத்து நிறுத்திய ஒரு தேசிய முன்னனியின் ரோல்லர் கோஸ்ட்டர்</a>: "இந்தத் தேர்தலில், பெரும்பான்மை பெறாவிட்டால், மலேசியாவின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பங்கம் வருமென்று பிராச்சாரம் செய்து வந்தது <font color="#ff0000">தேசிய முன்னணி</font>. அரசாங்க இயந்திரம் தேர்தல் வேலைகளுக்கு முடுக்கி விடப்பட்டியிருந்தது. தொகுதிகள் வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.<br />
...<br />
"ஓம் சக்தி" என்ற <font color="#ff0000">ம.இ.க </font>வின் தேர்தல் மந்திரத்திற்கு எதிர்ப்பாக "மக்கள் சக்தி" என்று முழங்கிய தமிழர்கள், தங்களது எதிர்ப்பை சனநாயக முறைப்படி காட்டியிருக்கிறார்கள்."</p>
<hr />
<p>6. <a href="http://karuppupaiyan.blogspot.com/2008/03/blog-post_06.html">மலேசிய நிலவரம் ஒரு <b>கருப்பு </b>பார்வை</a>: "ஏப்ரலுக்கு மேல் <font color="#008000">கெ-அடிலான் </font>கட்சியின் ஆலோசகரும் முன்னைய துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவசரம் அவசரமாக இந்த தேர்தலை நடத்துகிறது மலேசிய அரசு.<br />
...<br />
கல்வி, வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்(பூமி புத்ரா) என்ற பெயரில் மலாய்க் காரர்களுக்குத்தான் முன்னுரிமை. காவல், ராணுவம், அரசாங்க நிறுவனங்கள், குடிநுழைவுத்துறை, மின்சாரம், வங்கி என அத்தனை அரசு வேலைகளும் மலாய்க்காரர்களுக்குத்தான். சீனர்கள் அரசையோ அரசு வேலையையோ நம்புவது இல்லை. கையில் வைத்திருக்கும் காசினைக் கொண்டு சொந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் வேலையைத்தான் நம்பி இருக்கின்றனர்.<br />
...<br />
பாரிசன் தேசியக் கூட்டணிக்குக் கடும் போட்டியாக <font color="#008000">எதிர்க்கட்சித் </font>தரப்பில் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (National Justice Party - PKR), பார்டி இஸ்லாம் மலேசியா (Parti Islam se-Malaysia, or PAS), பார்ட்டி கெ-அடிலான் ரக்யத், Chinese Democratic Action Party (DAP) ஆகிய கட்சிகள் உள்ளன.</p>
<p><font color="#ff0000">ஆளும் கூட்டணிக்கு </font>ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (United Malays National Organization), மலேசிய சீன சங்கம் (Chinese Gerakan party), மலேசிய இந்திய காங்கிரஸ் (Malaysian Indian Congress) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவுடன்தான் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் பாரிசன் தேசியக் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
...<br />
இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு <b>(<font color="#008000">ஹிண்ட்ராப்</font>) </b>நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், வழக்கறிஞர் மனோகரன், வசந்தகுமார் மற்றும் கணபதி ராவ் ஆகியோர் வெளியே வர முடியாத படிக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.<br />
...<br />
மலேசிய தொலைக்காட்சி நடிகை சுஜாதா கொலைக்கு, மஇக தலைவர் <font color="#ff0000">சாமிவேலுவின் </font>மகன் வேல்பாரியே காரணம் என்று பலரும் நம்புகின்றனர். தவிர மைக்கா ஹோல்டிங்சில் பணம் போட்ட இந்தியர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் வாயில் வெண்ணெயை தடவி விட்டார் சாமிவேலு.</p>
<p><i>நன்றி</i>: <a href="http://karuppupaiyan.blogspot.com/2008/03/blog-post_06.html">விடாது கருப்பு</a></p>
<hr />
<p>7. <b>மலேசியாவில் மத சுதந்திரம்</b>: <a href="http://www.economist.com/displayStory.cfm?story_id=9262452">Religion in Malaysia &#124; Lina Joy's despair &#124; Economist.com</a>:  A legal blow to religious freedom</p>
<p>8. <b>இஸ்லாமிய ஷரியத் சட்டமா? ஜனநாயகமா? </b>- <a href="http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7265404.stm">BBC NEWS &#124; Asia-Pacific &#124; Malaysian voters wooed with Islam</a>: "Voting and religion - Islamic credentials play a major role in the election campaign"</p>
<p>9. <b>இட ஒதுக்கீடு கொள்கை ஏன் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடாது? </b>- <a href="http://online.wsj.com/article/SB120510063874322949.html?mod=djemEditorialPage">Pro-Malay Malaise - WSJ.com</a>: Affirmative action policies are holding the country back.</p>
<hr />
<p><b>செய்திகள்:</b></p>
<p>1. <a href="http://online.wsj.com/article/SB120510041016122943.html?mod=djemEditorialPage">Malaysia's Maturing Democracy - WSJ.com</a>: Even Malays reject the status quo and vote for change.</p>
<p>2. <a href="http://www.nytimes.com/2008/03/09/world/asia/09malaysia.html?scp=5&#38;sq=malaysia&#38;st=nyt">Malaysia’s Governing Coalition Suffers a Setback - New York Times</a></p>
<p>3. <a href="http://www.nytimes.com/reuters/world/international-malaysia-election.html?_r=1&#38;scp=2&#38;sq=malaysia&#38;st=nyt&#38;oref=slogin">Malaysia Opposition Takes Aim At Affirmative Action - New York Times</a></p>
<p>4. <a href="http://satrumun.com/2008/03/09/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95/">மலேஷியத் தேர்தல் முடிவுகள்</a>: ஆட்சியை மீண்டும் கைப்பற்றினாலும் தேசிய முன்னணிக்கு பின்னடைவு</p>
<p>5.  மலேசியாவில் <a href="http://satrumun.com/2008/02/16/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/">மீண்டும் தமிழர்கள் போராட்டம்</a></p>
<p>6. மலேசியாவில் <a href="http://satrumun.com/2008/01/11/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/">இந்திய வம்சாவளி அரசியல்வாதி</a> படுகொலை</p>
<p>7.  Facing Malaysia's Racial Issues - <a href="http://snapjudge.blogspot.com/2007/11/facing-malaysias-racial-issues-time.html">பத்தித் தொகுப்பு</a></p>
<hr />
<p><b>நடுவில் என்னுடைய ரெண்டணா</b>:</p>
<ul>
<li><b>என்ன நடந்தது? </b>முன்னாடி ஒரேயொரு மாநிலத்தில் மட்டும் ஆளுங்கட்சியாக இருந்த எதிரணியினர், ஒற்றுமையாகப் போராடியதன் விளைவாக ஐந்து மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாக்கி எட்டு மாநிலங்களிலும் ஐம்பதாண்டுகளாக ஆண்ட 'தேசிய முன்னணி'யே மீண்டும் தொடர்கிறது. சென்ற சட்டசபையில் வெறும் பதினெட்டு இடங்களைப் பிடித்திருந்த எதிரணி, பாஜக-வும் விபி சிங்கின் ஜனதா தளமும் கை கோர்த்தது போல் போட்டியிட்டதில் 82 இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். 'ஜன் மோர்ச்சா' போட்டியிட்டது போல் மத வாத இந்துத்வா சக்திகளுடன் நேரடியாக சங்காத்தம் வைத்துக் கொள்ளவில்லை; ஆனால், மலேசியாவை இஸ்லாமிய நாடாக்க விழையும் Parti Islam se-Malaysia, or PAS கட்சியுடன் திரைமறை தொகுதி உடன்பாடு உண்டு.</li>
</ul>
<ul>
<li><b>ஆளுங்கட்சிக்கு தோல்வியா?</b> அப்படித் தோன்றவில்லை. மீசையில் துளியூண்டு மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலிலும் போட்டியிட முடியவில்லை. ஆளுங்கட்சிக்குத்தான் பெரும்பான்மையும் கிடைத்திருக்கிறது. இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க விரும்பும் எதிர்க்கட்சிக்கும், ஹின்ட்க்ராஃப்க்கும் ஏழாம் பொருத்தம்; அப்படியிருந்தும் தேர்தலுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, கழுத்தறுக்காமல் இருந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியைப் பார்த்தால் <i>சீட்டுக்கட்டு மாளிகை </i>போல் படுகிறது.</li>
</ul>
<ul>
<li><b>தேர்தலில் போட்டியிட இயலாமல் செய்யப்பட்ட அன்வர் உத்தமரா? </b>பெயரளவில் சுத்தம் என பொருள்படும் பெர்சி (Bersih) கூட்டமைப்பை உருவாக்கினாலும், ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார். மஹாதிருக்கு சரியான விகிதாச்சாரம் கொடுக்காத பிரச்சினையா அல்லது நிஜமாகவே தவறு செய்தவரா என்பது தெரியவில்லை. எப்படியாகினும், தன்னுடைய மகள், மனைவி, ஒன்று விட்ட மச்சினன், ரென்டு விட்ட மைத்துனி என்று பினாமியாக நிற்க வைத்து ஜெயிக்க வைக்கவும் தெரிந்த ஐ.எஸ்.ஓ.9000 அரசியல்வாதி.</li>
</ul>
<ul>
<li><b>ஏன் திடீர் தேர்தல்?</b> பெட்ரோல் விலை எகிறுவதால், பால் முதல் பாதாம் பருப்பு வரை எல்லாவற்றிலும் விலையேற்றம். தேர்தலுக்கு முந்தாநாள் வரை மானியம் கொடுத்து, எண்ணெய் பீப்பாயை தள்ளுபடியில் வழங்கிய அரசாங்கத்தால், இனியும் தாக்குப்பிடிக்க இயலாத நிலை.
<ol>
<li>அடுத்த, நிதி நிலை பொக்கீட்டில் (பட்ஜெட்) ஆயில் கொள்முதலுக்கான விலைவாசி அதிகரித்ததால் 'ஏற்றப்படுகிறது' என்று அறிவிப்பதற்கு முன் எலெக்சன் முடிந்து விட்டது.</li>
<li>அரசு ஊழியர்களுக்கு கொடுத்த போனசும் (முப்பத்தைந்து சதவீதமாம்!) அவர்கள் மனதில் இன்னும் பசுமையாக நிறைந்திருக்கும்போதே தேர்தல் நடந்தேறி இருக்கிறது.</li>
<li>அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கம் நிறைந்து பணப்புழக்கம் குறைந்து recession ஆக ஓடிக்கொன்டிருக்கிறது. இதனால், மலேசிய நாட்டின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விலைவு இனிமேல்தான் தெரிய ஆரம்பிக்கும்; அதற்கு முன் 'மலேசியா ஒளிர்கிறது' என்று போர்டு போட்டு தேர்தல்.</li>
</ol>
</li>
</ul>
<p><a href="http://www.economist.com/displayStory.cfm?story_id=10566786" title="Share capital per head of Population in Malaysia"><img src="http://snapjudge.wordpress.com/files/2008/03/cas688.gif" alt="Share capital per head of Population in Malaysia" align="right" /></a>
<ul>
<li><b>சீனர்களுக்குக் கூட இனப்பாகுபாடாமே?</b> மலையாளிகளைப் போல் சாமர்த்தியசாலிகள் எவரும் இல்லை என்பது என்னுடைய பெங்களூர் எண்ணம். அமெரிக்கா வந்தபிறகு தராசுக்கு (பாரிசன் நேசனலுக்கு இதுதான் தேர்தல் சின்னம்) அந்தப் பக்கம் வைக்க சீனர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆளுங்கட்சியின் ஸ்திரத்தன்மையும் மதவாதத்தை பெருமளவில் ஊக்குவிக்காத நிலையும் மேற்கத்திய கொள்கைகளை பின்பற்றி தாராளவாதத்தை முன்னிறுத்துவதும், செல்வந்தர்களான (read capitalists) சீனர்களின் நெஞ்சை நிறைத்தே இருக்கிறது. மலாய் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை குறைத்தால் நல்லதுதான்; அதற்காக பெரும்பான்மை மக்களுடன் விரோதம் பாராட்டக் கூடாது என்று நாணல் போல் வளைகிறார்கள்.</li>
</ul>
<hr />
<p><b>தொடர்புடைய பதிவுகள்:</b></p>
<p>1. <a href="http://jataayu.blogspot.com/2008/03/blog-post_09.html">ஜடாயு எண்ணங்கள்</a>: "மலேசியாவிலிருந்து ஒரு சந்தோஷ செய்தி!"</p>
<p>2. <a href="http://www.malaysiaindru.com/?p=291#more-291">இன்றைய தலையங்கங்கள் - மார்ச் 11</a></p>
<p>3. <a href="http://mynose.blogspot.com/2005/11/10.html">My Nose</a>: "கிழட்டு அனுபவங்கள்(10) - மலேசியா ராஜசேகரன்"</p>
<hr />
<p><b>மலேசிய வலையகங்கள்</b>:</p>
<p>1. <a href="http://www.malaysiaindru.com/">மலேசியா இன்று :: Malaysia Indru</a></p>
<p>2. <a href="http://olaichuvadi.blogspot.com/">"ஓலைச்சுவடி"</a></p>
<p>3. <a href="http://www.vanakkammalaysia.com/homepage.php?ranid=241238">VanakkamMalaysia.com</a></p>
<p>4. <a href="http://www.nanban.com.my/v1/default.aspx">Malaysia Nanban</a>5. <a href="http://www.thestar.com.my/">The Star Online</a></p>
<p>6. <a href="http://www.nst.com.my/">The New Straits Times Online </a></p>
<p>7. <a href="http://www.hindraf.org/">hindraf.org &#124; Hindu Rights Action Force; makkal sakthi here, makkal sakthi now!</a></p>
<p>8. <a href="http://malaysiavotes.wordpress.com/">Malaysia Votes (wordpress mirror)</a></p>
<hr />
<p><b>தொடர்புள்ள வலையகங்கள்</b>:</p>
<p>1. <a href="http://www.economist.com/countries/Malaysia/?CFID=14268851&#38;CFTOKEN=e1c260c25e415d02-A0F60270-B27C-BB00-01296CFFC60D52C5">Economist.com &#124; Country Briefings: Malaysia</a></p>
<p>2. <a href="http://topics.nytimes.com/top/news/international/countriesandterritories/malaysia/index.html">Malaysia News - Breaking World Malaysia News - The New York Times</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Panel for maximum devolution of powers to Tamils: All Party Representative Committee (APRC) proposals]]></title>
<link>http://bsubra.wordpress.com/2008/01/24/panel-for-maximum-devolution-of-powers-to-tamils-all-party-representative-committee-aprc-proposals/</link>
<pubDate>Thu, 24 Jan 2008 22:11:20 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://bsubra.wordpress.com/2008/01/24/panel-for-maximum-devolution-of-powers-to-tamils-all-party-representative-committee-aprc-proposals/</guid>
<description><![CDATA[அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளின் கு]]></description>
<content:encoded><![CDATA[<p class="storytext"><b>அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளின் குழுவின் தீர்வுயோசனைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசு விளக்கம்</b></p>
<p class="storytext">
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="208">
<tr>
<td rowspan="2" bgcolor="#ffffff"><img src="http://www.bbc.co.uk/f/t.gif" border="0" height="1" width="5" /></td>
<td>
<div><img src="http://www.bbc.co.uk/worldservice/images/2008/01/20080124163317rohitabogallaagama203.jpg" alt="இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம" height="152" width="203" /></div>
</td>
</tr>
<tr>
<td class="caption">இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம</td>
</tr>
</table>
<p>இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக் காணும் நோக்கில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினால் நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கையளிக்கப்பட்ட தீர்வு யோசனைகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்கிக்கூறும் நோக்கில் வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்பொன்றினை<br />
நடத்தினார்.</p>
<p class="storytext">                   <!-- end_story -->அதன்பின்னர் பத்திரிகையாளர்கள் மாநாடொன்றினை நடாத்திய அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இனப்பிரச்சனைத் தீர்விற்கான முக்கிய யோசனைகளில் முக்கிய அங்கமாக இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தும்படி ஜனாதிபதிக்கு இந்த அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு விதந்துரை செய்திருப்பதாகத் தெரித்தார்.</p>
<p class="storytext">இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் என்பது 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்மூலம் உருப்பெற்ற மாகாணசபைகளை                   சட்டரீதியாக உருவாக்க ஏதுவாக அமைக்கப்பட்ட சட்டமாகும்.</p>
<p class="storytext">
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="208">
<tr>
<td rowspan="2" bgcolor="#ffffff"><img src="http://www.bbc.co.uk/f/t.gif" border="0" height="1" width="5" /></td>
<td>
<div><img src="http://www.bbc.co.uk/worldservice/images/2008/01/20080124162907baila203jpg.jpg" alt="இலங்கை அரசின் பிரதிவெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா" height="152" width="203" /></div>
</td>
</tr>
<tr>
<td class="caption">இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா</td>
</tr>
</table>
<p>இது குறித்து பி.பி.சி தமிழோசைக்குத் தகவல் தெரிவித்த பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா இந்த தீர்வு யோசனகளில் கிழக்குமாகாண சபைக்கு உடனடியாகத் மாகாண சபைத்தேர்தல் ஒன்றினை நடாத்தும்படியும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடாத்தமுடியாத சூழ்நிலை காணப்படுவதால் அங்கு ஆளுனரிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் தற்காலிக அலோசனைக் கவுன்சிலொன்றும் உருவாக்கப்பட விதந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.</p>
<p class="storytext">பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா வழங்கிய விசேடபேட்டியை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.</p>
<p class="storytext">&#160;</p>
<hr />
<p class="storytext"><b>அனைத்துக் கட்சிக் குழுவின் பரிந்துரைகளுக்கு இந்தியா ஆதரவு</b></p>
<p class="storytext">
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="208">
<tr>
<td rowspan="2" bgcolor="#ffffff"><img src="http://www.bbc.co.uk/f/t.gif" border="0" height="1" width="5" /></td>
<td>
<div><img src="http://www.bbc.co.uk/worldservice/images/2006/01/20060117235409navtejsarna203.jpg" alt="இந்திய அரசின் பேச்சாளர் சர்னா" height="152" width="203" /></div>
</td>
</tr>
<tr>
<td class="caption">இந்திய அரசின் பேச்சாளர் சர்னா</td>
</tr>
</table>
<p class="storytext">அதிகாரப்பரவல் மூலம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக, அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்                   குழு, இடைக்காலப் பரிந்துரைகளை அளித்திருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்திருக்கிறது.</p>
<p class="storytext">இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா<br />
'இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு வழிமுறைகள் மற்றும் ஆட்சிமொழி வழிமுறைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் இடைக்காலப் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள்தான் தீர்வு காண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. அந்தத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்' என்றார்.</p>
<p class="storytext">‘’இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடனும், அந்நாட்டு மக்களுடனும் இந்தியா தொடர்ந்து செயலாற்றும். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் அப்படிப்பட்ட தீர்வுக்கு பங்காற்றுவதாக இருக்கும் நிலையில், அது வரவேற்கத்தகுந்த முதல் நடவடிக்கை” என்றும் தெரிவித்தார் இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான நவ்தேஜ் சர்னா.</p>
<p class="storytext">&#160;</p>
<hr />
<p class="storytext"><b>கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் 16 உடல்கள் கண்டுபிடிப்பு</b></p>
<p class="storytext">
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="208">
<tr>
<td rowspan="2" bgcolor="#ffffff"><img src="http://www.bbc.co.uk/f/t.gif" border="0" height="1" width="5" /></td>
<td>
<div><img src="http://www.bbc.co.uk/worldservice/images/2006/11/20061104130808vavupolice203a.jpg" alt="இலங்கை போலீசார்-ஆவனப் படம்" height="152" width="203" /></div>
</td>
</tr>
<tr>
<td class="caption">இலங்கை போலீசார்- ஆவனப் படம்</td>
</tr>
</table>
<p>இலங்கையின் வடமத்திய பகுதியில் கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் உள்ள கிரிகெட்டுவௌ என்ற இடத்தில் 16 மனித சடலங்கள் இன்று பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.</p>
<p class="storytext">மண்குவியல் ஒன்றில் மனித கையொன்று தெரிந்ததைக் கண்ட சிவிலியன் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து பொலிசாருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அனுராதபுரம் மாவட்ட நீதவான் சிவந்த மஞ்சநாயக்க அவர்களின் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டியபோது 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.</p>
<p class="storytext">இதனருகில் காணப்பட்ட இன்னுமொரு மண்குவியலை சந்தேகத்தின் பேரில் தோண்டியபோது மேலும் 6 மனித சடலங்கள் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த 16 சடலங்களும் ஆண்களின் சடலங்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.</p>
<p class="storytext">முதல் 10 சடலங்களும் கடந்த இரண்டு தினங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஏனைய 6 சடலங்களும் புதைக்கப்பட்டு சுமார் ஒரு வாரகாலம் இருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.</p>
<p class="storytext">இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்திருக்கும் பொலிசார் இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்த                   விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.</p>
<p class="storytext">நீதவானின் உத்தரவுக்கமைய இந்தச் சடலங்களை கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை கெப்பிட்டிகொல்லாவ                   பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Blood and Belief: The PKK and the Kurdish Fight for Independence by Aliza Marcus ]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2007/11/28/blood-and-belief-the-pkk-and-the-kurdish-fight-for-independence-by-aliza-marcus/</link>
<pubDate>Wed, 28 Nov 2007 05:21:03 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2007/11/28/blood-and-belief-the-pkk-and-the-kurdish-fight-for-independence-by-aliza-marcus/</guid>
<description><![CDATA[நன்றி &amp; முழுவதும் படிக்க: எகனாமிஸ்ட்]]></description>
<content:encoded><![CDATA[<p><em>நன்றி</em> &#38; முழுவதும் படிக்க: <a href="http://www.economist.com/displaystory.cfm?story_id=10130690&#38;fsrc=RSS"><strong>எகனாமிஸ்ட் புத்தக விமர்சனம்</strong></a></p>
<p>PKK: who are these indomitable fighters and what is their true goal?</p>
<p>Aliza Marcus, an American journalist who was put on trial in Turkey for her reporting on the Turkish army's abuses against ordinary Kurds, charts the origins and evolution of the movement. Her scholarly, gripping account is based on interviews with, and the unpublished diaries of, former PKK militants.</p>
<p>With Syria's blessing, the PKK sent its men and women into Lebanon's Bekaa valley for training by Palestinian militants.</p>
<p>The group's fortunes were even harder hit by the capture in 1999 of its leader, Abdullah Ocalan, by Turkish secret agents in Nairobi. His subsequent recanting—he called the rebellion “a mistake” and offered to “serve the Turkish state”—is well documented. But little is known about Mr Ocalan's personal life and Ms Marcus helps to lift the veil shrouding a leader who used to shuttle between villas in Damascus and Aleppo while his fighters roughed it in the mountains. Deserters and dissidents would be summarily executed. Indeed Mr Ocalan did not hesitate to order the deaths of women and children if they were related to members of a stateemployed Kurdish militia that fought alongside the Turkish army.</p>
<p>it is plain that his leadership has become increasingly symbolic and that a new generation of hardliners is gaining the upper hand.</p>
<p>What is missing from Ms Marcus's excellent reporting is the growing appeal of Turkey's ruling Justice and Development (AK) party to Turkish Kurds. A mixture of social-welfare schemes and Islamic piety helped AK to trounce the biggest pro-PKK party in many of its former strongholds at the general election last July. </p>
<p><strong>புத்தகத்தின் <a href="http://www.mitpressjournals.org/doi/abs/10.1162/wopj.2007.24.1.75">முன்னுரையில்</a> இருந்து:</strong></p>
<p>The small group of armed men and women grew into a tightly organized guerrilla force of some 15,000, with a 50,000-plus civilian militia in Turkey and tens of thousands of active backers in Europe. The war inside Turkey would leave close to 40,000 dead, result in human rights abuses on both sides, and draw in neighboring states Iran, Iraq, and Syria, which all sought to use the PKK for their own purposes.</p>
<p>The rebels had many reasons for returning to battle: it was a response to Ankara’s political inaction; it was a way to ensure that the PKK remained relevant and in control; and finally, there was Iraq to consider...the independent state that Kurds in Iraq, like many of those in Turkey, had long hoped for. And the PKK, once viewed as the dominant Kurdish group in the region, suddenly was afraid of slipping behind.</p>
<p>Turkey, where Kurds number some 15 million, making up about 20 percent of Turkey’s 70 million population.</p>
<p>The Kurds are the world’s largest stateless people.</p>
<p>The main reason was that when Kurds weren’t being killed by the thousands—as happened in Halabja—the West didn’t care. The Kurdish conflict seemed as remote as the region where they lived, a treacherous terrain intersected by the borders of Turkey, Iran, Iraq, and Syria. And the Kurds themselves were difficult to understand. Divided by borders, dialects, tribal loyalties, and blood feuds, it was easy to dismiss their uprisings as the machinations of gun-toting brigands suspicious of the central authority.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பள்ளிச் சிறுமிகள்]]></title>
<link>http://friendlyfiretamil.wordpress.com/2007/07/13/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/</link>
<pubDate>Fri, 13 Jul 2007 16:09:15 +0000</pubDate>
<dc:creator>Friendly Fire</dc:creator>
<guid>http://friendlyfiretamil.wordpress.com/2007/07/13/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/</guid>
<description><![CDATA[பங்களாதேஷில் இன்று நடக்கிவிருந்த கு]]></description>
<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷில் இன்று நடக்கிவிருந்த குழந்தை திருமணம் ஒன்று பரபரப்பான முறையில் தடுக்கப்பட்டது. பங்களாதேஷின் சத்கீரா எனும் ஊரில் உள்ள அப்துல் கரீம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பதிமூன்று வயது மாணவி ஹபீபா சுல்தானா. இவளை இருபத்து மூன்று வயதான இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தார் வறுமையில் வாடும் பெண்ணின் தந்தை. சிறுமி ஹபீபாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், அவளால் தன் தந்தையின் முடிவை மறுக்கும் துணிவில்லை. இந்நிலையில் தன் வகுப்புத் தோழிகளிடம் தனக்கு கட்டாய திருமணம் நடக்கவிருக்கும் விபரத்தை கூறியிருக்கிறாள் ஹபீபா. உடனே இக்கட்டில் இருந்த தன் தோழிக்கு ஆதரவாக ஒன்று கூடி தங்கள் குரலை உயர்த்தினர் இந்த பள்ளிச் சிறுமியர். கிட்டத்திட்ட 50 பள்ளி மாணவிகள் பள்ளியின் எதிரில் ஒன்று கூடி ஹபீபாவின் திருமணத்தை நிறுத்துமாறு போராட்டம் நடத்தினர். மாணவிகளின் பெற்றோர்களும் ஹபீபாவின் தந்தையிடம் திருமணத்தை நிறுத்துமாறு பேசிப்பார்த்தனர். ம்ஹூம், இதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை ஹபீபாவின் தந்தை. சிறுமிகளும் விட்டுக் கொடுக்கவில்லை. சட்டவிரோதமாக ஹபீபாவுக்கு நடக்கவிருக்கும் குழந்தைத் திருமணத்தை தடுக்குமாறு மனு ஒன்றை எழுதி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்த சிறுமியர். அதன் பின் காவல்நிலையத்தினர் ஹபீபாவின் தந்தையை எச்சரித்தவுடன் அவரால் தன் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது. சிறுமிகள் தங்கள் உரிமையை நிலைநாட்டினர்.</p>
<p>மேலும் விவரங்களுக்கு: <a href="http://news.bbc.co.uk/2/hi/south_asia/6897188.stm">BBC NEWS &#124; South Asia &#124; Child wedding 'stopped by pupils'</a></p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
